Wednesday, August 7, 2019

உயிரைத் துச்சமாக மதித்து நாட்டைக் கட்டியெழுப்புவாராம் பிரேமதாஸவின் வாரிசு!

எனது ஒரே நோக்கமாக இருப்பது என்னவென்றால், எனது தந்தை சமயத்திற்கும் மதத்திற்கும் செய்த சேவையை விடவும் அதிகமான சேவை செய்வதே என அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் தனக்கு அதற்கான அவகாசம் கிட்டுமாயின், ஐந்து ஆண்டுகளுக்குள் இந்நாட்டின் சகல விகாரைகளையும், வழிபாட்டிடங்களையும் கட்டியெழுப்புவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தனக்கு அவகாசம் கிட்டுமாயின் அதிகாலை நான்கு மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிவரை சேவையாற்றுவேன் என்றும், உயிரைத் துச்சமாக மதித்து தாய்நாட்டைக் கட்டியெழுப்புதவற்காக தான் தயாராக இருக்கின்றேன் எனவும்  அமைச்சர் சஜித் பிரேமதாச கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com