Tuesday, August 27, 2019

நிரந்தர விடிவு தரப்படும் என எழுத்து மூலம் தந்தால் ஆதரவு தருவோம் சாந்தி எம்பி சொல்கிறார்

தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதொரு விடிவைத் தருவதாக, எழுத்து மூலம் எந்தக் கட்சி ஆதரவு தெரிவிக்கின்றதோ, அதற்கே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் . சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பகுதியில், அவரின் விசேட நிதி ஒதுக்கீடு ஒன்றின் மூலம் நிர்மாணிக்கப்படவிருக்கும் வீதி ஒன்றிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசியலிலே ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துக்கொண்டிருக்கின்றது.

யாரை ஜனாதிபதியாக நியமிப்பது என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றது. பலர் நியமித்தும் இருக்கின்றனர். பலர் வேட்பாளர்களை நியமிப்பதில் இழுபறி நடந்துகொண்டிருக்கின்றது.

ஆனால் அவர்களுடய கட்சி இழுபறிக்குள் நாங்கள் தலயீடு செய்யப் போவதில்லை.

எனினும் எந்தக் கட்சி தமிழ் மக்களின் விடிவிற்காக சரியான முறையிலே, வழமையாக கடந்த 70வருடங்கள் ஏமாற்றியதைப்போல் பேச்சுவார்த்தையில் இல்லாமல், ஒரு இழுபறி நிலை இல்லாமல், எழுத்து மூலமாக எமது தமிழினம் சுயநிர்ணய உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழ்வதற்குரிய ஆயத்தமாக இருக்கின்ற இந்தச் சூழலை தொடர்ந்து கொண்டு நடத்தி, ஒரு விடிவினை நிரந்தரமாகத் தருவதற்கு எந்தக் கட்சி எழுத்துமூலமாக ஒரு ஆதரவினை, நிச்சயத்தினைத் தெரிவிக்கின்றதோ அதற்கே எமது கட்சி ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருக்கின்றது. என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com