Monday, August 26, 2019

நாட்டு மக்கள் கேட்கும் ஒரே தலைவர் „சஜித்" என்கிறார் கபீர் ஹஷீம். ஐ.தே.க அனாதைகளாகியுள்ளனராம். ரோஹித்த

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சி சாராத வேட்பாளர் ஒருவரை களமிறக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போது மேற்கண்ட தகவலை வெளியிட்ட அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :

ஐ.தே.க தற்போது அனாதையாகியுள்ளதாகவும் அந்த கட்சி அருவருக்கதக்க ஒன்றாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்ட ரோஹித்த அபேகுணவர்த்தன உடைந்துபோயிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் வெல்டிங் செய்து பொருத்தியெடுக்கும் நோக்கில் நேற்றிரவு மீண்டுமொரு கலந்துரையாடலில் இடம்பெற்றதாகவும் தெரிவித்தார்:

மேலும் கட்சி சார்பில் போட்டியிடும் உறுப்பினர் கட்சி சாராத ஒருவராக இருக்கவேண்டும் என்றும் அவ்வாறு கட்சியின் உறுப்பினர் ஒருவர் போட்டியிடுவதாக இருந்தால், அவர் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் அங்கு பேசப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

அதாவது நாட்டின் ஜனாதிபதி கட்சி சார்பற்ற ஒருவராக இருக்கவேண்டும் என்று அவர்கள் அதற்கு பாடம் கற்பிக்க முற்படுகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்:

இதேநேரம் நாட்டு மக்கள் கேட்டும் ஒரே தலைவர் சஜித் பிரேமதாச என அமைச்சர் கபீர் ஹஷிம் தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

இந்த சந்தர்பத்தில் உண்மையாக ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்த கேள்விக்கு பதிலளித்தால் நிச்சயம் ஒழுக்காற்று விசாரணைக்கு முகம் கொடுக்க நேரிடும் என கூறினார்.

எவ்வாறாயினும் வேட்பாளர் குறித்து கட்சி இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ முடிவையும் எடுக்கவில்லை என கூறினார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவையே மக்கள் அதிகமாக விரும்புவதாகவும் இது தொடர்பில் குழு கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டதாக கூறினார்.

மக்கள் கேட்கும் தலைவரை கொடுக்க வேண்டியது கட்டாயம் எனவும், எவ்வாறாயினும் கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களோடு கலந்து பேசி தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அனைத்தும் சுபநேரத்தில் இடம்பெறும் எனவும் அந்த சுப நேரம் நாளை அல்லது நாளை மறுநாள் மலரும் எனவும் கூறினார்.

பதுளை மற்றும் மாத்தறையில் நடைபெற்ற கூட்டங்களில் கட்சியின் தவிசாளர் என்ற வகையில் ஏன் கலந்துக்கொள்ளவில்லை என ஊடகவியலாளர்கள் வினவினர்.

உத்தியோகப்பூர்வமாக வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்வதற்கு முன்னர் கூட்டங்கள் இப்படி இருந்தால் வேட்பாளர் தெரிவின் பின் எப்படி இருக்கும் எனவும் அமைச்சர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com