Monday, August 26, 2019

இலங்கை இராணுவத்தினர் யார் என்பது பற்றி தமிழ் மக்கள் நன்கு அறிவர். வெளியாரின் நற்சான்றிதழ் தேவையில்லை. சவேந்திர

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் இலங்கை இராணுவத்தினர் எவ்வாறு நடத்து கொண்டார்கள் என்பதை சம்பந்தப்பட்ட மக்கள் நன்கு அறிவர் என்றும் அந்த மக்களை எவ்வாறு இராணுத்தினர் தமது குடிக்கும் தண்ணீரையும் உண்ணும் உணவையும் கொடுத்து காப்பாற்றினர் என்பது குறித்தும் வன்னியிலிருந்து மீட்கப்பட்ட மக்களுக்கு ஞாபகம் உண்டு என்றும் புதிய இராணுத் தளபதியாக கடமை ஏற்றுள்ள லெப் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று கண்டியில் தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன், அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களையும் சந்தித்து ஆசி பெற்றுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன் அங்கு தொடர்ந்து கருத்துரைக்கையில் :

'அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் நாட்டுக்கு சேவை செய்வதில் எனது கடமையைச் செய்துள்ளேன்.

ஆனால் சில நபர்கள் என் மீது போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் விடாமுயற்சியுடன் இருக்கின்றனர்.

எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ போர்க்குற்றங்கள் தொடர்பாக என் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சே எடுக்கும்.

சிறிலங்கா இராணுவம் ஒரு நவீன இராணுவமாக முன்னேறியுள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதும், புலனாய்வு அமைப்புகளை வலுப்படுத்துவதும், முறையான திட்டத்தை செயல்படுத்துவதும் இராணுவத்தின் முக்கிய பங்காகும்.

நாட்டில் நிலவும் சூழ்நிலைகளுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் பாதுகாக்க இராணுவம் செயல்பட்டு வருகிறது.' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com