Saturday, August 10, 2019

மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருபகுதி மஹிந்தருடன் மந்திராலோசனை.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருசிலர், நேற்றுக் காலை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளனர். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின்உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

அங்கு எதிர்க்கட்சித் தலைவருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் அறிவித்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களிற் சிலரும் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மீது மக்கள் அதிருப்தி அடைந்துவரும் நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தரப்பினருக்கு ஆதரவு வழங்கும் நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக சந்திப்பில் ஈடுபட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com