Saturday, August 10, 2019

சஜித்துக்கு கம்பி நீட்டிவிட்டு டெல்மனில் படுத்துக்கிடக்கின்றார் விஜயகலா.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளர் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்ற சஜித் பிறேமதாஸ தற்போது யாழ் மாவட்டத்தில் நிலைகொண்டுள்ளார். பல்வேறு வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை அங்குரார்ப்பனம் செய்து வைக்கவும் அது தொடர்பான ஆராய்வுகளை மேற்கொள்ளவும் அவர் யாழ் வந்துள்ளார்.

இந்நிலையில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா டெல்மன் வைத்தியசாலையில் படுத்துக்கிடப்பதாக அறியமுடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சியினுள் முரண்பாடு வலுத்துள்ளது. சஜித் பிறேமதாஸவை வேட்பாளராக நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் அக்கோரிக்கைக்கு பலத்த எதிர்ப்பும் கட்சியினுள் நிலவுகின்றது.

உட்கட்சி மோதல்கள் வலுத்துள்ள நிலையில் சஜித் பிறேமதாஸவின் செயற்பாடுகளுக்கு கட்சியினுள் குழிபறிப்புக்கள் இடம்பெறுவதாக அறியமுடிகின்றது. அந்த வகையில் இன்று யாழ் வந்துள்ள சஜித்தின் நிகழ்வுகளில் விஜயகலாவை கலந்து கொள்ள வேண்டாம் என ரணில் விக்கிரமசிங்க நேரடியாக அழைத்து தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நிகழ்வுகளுக்கு வருமாறு சஜித்திடமிருந்தும் விஜயகலாவிற்கு அழைப்பு கிடைத்ததாக தெரிவிக்கும் யாழ் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் இருதரப்பையும் சமாளிக்கும் பொருட்டு விஜயகலா வைத்தியசாலையில் படுத்துக்கிடப்பதாக தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட இரண்டாம் கட்ட தலைமையே இன்றைய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடாத்துவதாக இலங்கைநெற் அறிகின்றது:

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com