Sunday, August 11, 2019

10 000 விகாரைகளுக்கு குர்ஆன் பிரதிகள் வழங்கப்படவுள்ளன.... வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறார் ரிஸாம் அரூஸ்

சமூக வலைத்தளங்களின் ஊடாக பெளத்த மதகுருமார்களுக்கும், பெளத்தர்களுக்கும் எதிராக கடும் குரோத வார்த்தைகளைக் கக்கிய ரிஸாம் அரூஸ் என்பவர், நேற்று ஊடகச் சந்திப்பாென்றில் கலந்துகொண்டு தன்னால் வெளியிடப்பட்ட கருத்துத் தொடர்பில் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

சமூக வலைத்தளங்களின் ஊடாக சில நாட்களுக்கு முன்னர் பெளத்த மதகுருமாரையும், பெளத்த மக்களையும் விளித்து பல குரோத வார்த்தைகளைக் கக்கியிருந்தார். அவரது அந்தக் கருத்துக்கள் வைரலாகப் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதுஎவ்வாறாயினும் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர், தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பினரால் மேற்கொள்ளப்படவுள்ள அடிப்படைவாதக் காரியங்கள் பற்றி அங்கு வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்.

அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போது, சமூக வலைத்தளத்தில் தான் பேசி குற்றம் இழைத்ததாகவும், அதற்காக முழு பெளத்தர்களிடமும் மகா சங்கத்தினரிடமும் பகிரங்க மன்னிப்புக்கோருவதாகவும் இதற்குப் பின்னர் இவ்வாறான விடயங்கள் நடைபெற மாட்டாது எனவும் குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் தெளஹீத் ஜமாஅத் அமைப்பு மிக விரைவில் 10 000 விகாரைகளுக்கு குர்ஆன் பிரதிகள் பகிர்ந்தளிக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.அதற்காக அவர்களில் ஒரு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

'விகாரைகளுக்குச் செல்கின்ற இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட பெளத்த மதகுருமார்கள் அவர்களிடம் இருக்கின்றார்கள். அதுதொடர்பில் தன்னிடம் ஒலிநாடாக்கள் உள்ளன. இதனை உறுதியாக நான் சொல்கிறேன். அவர்கள் மூலமாக பன்சாலைகளுக்கு (விகாரைகளுக்கு) குர்ஆன் பிரதிகளைக் கொண்டு செல்ல முடியும். தற்போது அந்தக் குர்ஆன் பிரதிகளுக்காக அரைவாசிப் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு மாதங்களில் கல்கத்தாவிலிருந்து இலங்கைக்குக் குர்ஆன் பிரதிகள் வரவுள்ளன. இலங்கைக்கு வருவதற்குத் தடைவித்தக்கப்பட்டுள்ள நபரொருவர், அப்துல் ராசிக்கின் ஆசிரியர் மூலமாகத்தான் இந்தக் குர்ஆன் பிரதிகளை இங்கு வரச்செய்கின்றார். திரிபுபடுத்தப்பட்ட ஒரு விடயத்தைத்தான் சமூகமயப்படுத்த முனைகிறார்கள். அதன் மூலமாகப் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள். அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளின் ஒரே நோக்கம் தேர்தல் என்பதால் இந்த விடயங்களை மூடி மறைக்கின்றார்கள்'

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தத்தமது பதவிகளைப் பெற்றுக் கொண்டது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது, ஏமாற்றினார்கள் என்றும் அவர்களுள் பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு நல்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டார். பெயர் ரீதியாக தான் ஹிஸ்புல்லா பற்றிக் குறிப்பிட்டதாகவும், ரிஷாத் தொடர்பில் வெளிச்சத்திற்குக் கொண்டு வர முடியாமற் போனதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல இலங்கையில் தெளஹீத் ஜமாஅத்தினர் 6 இலட்சம் அளவில் இருக்கின்றார்கள் என்றும், அரசியல்வாதிகளுக்கு அவர்களின் வாக்குகளே குறியாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு கருத்துத் தெரிவித்த சிங்களே அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரதீப் சஞ்சீவ, ரிஸாம் அரூஸ் என்பவரால் ஸஹ்ரானுக்கு 2006 ஆம் ஆண்டு ISIS பயங்காரவாத அமைப்பினால் வழங்கப்பட்ட சான்றிதழ் ஒன்றைத் தன்னிடம் ஒப்படைத்ததாகக் கூறினார்.அந்த சான்றிதழ் மூலம் ஸஹ்ரான் ISIS பயங்காரவாத அமைப்போடு தொடர்பு வைத்திருந்தார் என்பதை உறுப்படுத்த முடியும் எனவும், ரிஸாம் அரூஸ் என்பவரை அழைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com