Tuesday, July 30, 2019

சிறைச்சாலை புலி நண்பனுக்கு கிளிநொச்சியில் வீடு கட்டிக்கொடுத்தார் நாமல் ராஜபக்ச.

எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் புத்திரன் நாமல் ராஜபக்ச விளக்க மறியலிலிருந்தபோது நண்பனாகிய கிளிநொச்சி கணகாம்பிகைகுளத்தைச் சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினரான சமரிமுத்து லோகநாதனின் குடும்பத்திற்கு குடிமனை ஒன்றினை அமைத்துக்கொடுத்துள்ளார்.

புலம்பெயர் தேசம் எங்கும் இன்றுவரை வன்னி மக்களின் வாழ்வாதாரத்திற்கு என நிதிசேகரிக்கப்படுகின்ற நிலையில் இன்று(30) காலை 10.30 நாமல் ராஜபக்ச தனது சொந்தச் செலவில் முன்னாள் புலியின் குடும்பத்தினருக்கு வீடு ஒன்றினை புதிதாக அமைத்து பாரமளித்துள்ளார்.

தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குறித்த முன்னாள் புலி கிளிநொச்சி விஜயம் செய்துள்ள நாமல் ராஜபக்ச கலந்துகொண்ட பல்வேறு சந்திப்புக்களின்போதும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குpளிநொச்சியில் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்ட நாமல் ராஜபக்ச விளையாட்டுக்கழகங்களுக்கு உபகரணங்கள் சிலவற்றை வழங்கிவைத்துள்ளார்:

அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் :

தாம் வடக்கின் வசந்தம் திட்டத்தினூடாக வடக்கை கட்டியெழுப்பியதாகவும் தற்போதுள்ள அரசாங்கம் கம்பரெலியவூடாக வடக்கை அழிப்பதாகவும் தெரிவித்துள்ளார்:









0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com