Wednesday, July 24, 2019

கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்க கிட்டு முஸ்லிம்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் இதோ!

கல்முனை உப பிரதேச செயலக விடயம் இன்று தமிழ் முஸ்லிம் அரசியல் வங்குரோத்தர்களால் தங்கள்து வாக்குவங்கிகளை நிரப்பும் சாதனமாக கையாளப்பட்டுவருகின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படமுடியாதது என்ற முஸ்லிம் தரப்பின் அடம்பிடிப்புக்கு பிரதான காரணமாக கூறப்படுவது யாதெனில், கல்முனை பிரதேச செயலகம் இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு முன்னர் ஒன்றாகவே இருந்தது என்றும் இந்திய இராணுவத்தினருடன் இணைந்திருந்த தமிழ் ஆயுதக்குழுக்கள் ஆயுதமுனையிலேயே குறித்த பிரதேச செயலகத்தை பிரித்தனர் என்பதுமாகும்.

பிரதேச செயலக பிரிப்பானது இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்த காலத்தில் தமிழ் ஆயுதக்குழுக்களின் ஆழுகைக்குள் கல்முனை இருந்தபோது, பிரிக்கப்பட்டாலும் அவ்விவகாரத்தில் ஆயுதக்குழுக்கள் நேரடியாக தலையிட்டார்கள் என்ற எவ்வித பதிவுகளும் இல்லை. அத்துடன் அப்பிரிப்பானது அத்தருணத்தில் மக்களின் வரவேற்பினை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பேயை அழிக்க பிசாசுடன் கூட்டுச்சேருவேன் என புலிகளுடன் தேனிலவு கொண்டாடிய பிறேமதாஸ புலிகளை ஏவல்பிசாசுகளாக மாற்றி மாகாண சபை நிர்வாகத்தை சீர்குலைக்க ஏவிவிட்டார். அதன் பின்னணியில் கிழக்கிலங்கையில் முஸ்லிம் கிராமங்களில் ஒழிந்து கொள்வதற்கும் மாகாண சபை நடவடிக்கைகளை முடக்குவதற்குமாக கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும் ஒப்பந்தம் ஒன்றை புலிகள் முஸ்லிம் தரப்புடன் செய்து கொண்டனர்.

புலிகளின் தளபதிகளின் ஒருவரான கிட்டு தலைமையில் சென்னையில் 1988 ஏப்ரல் மாதம் 15,16,19 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற குறித்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், பதினெட்டு (18) அம்சங்களைக்கொண்ட ஒப்பந்த பத்திரத்தில் 21.04.1988 திகதி புலிகளின் சார்பில் 'கிட்டு' என்று அழைக்கப்பட்ட சதாசிவம் கிருஷ்னகுமாரும், முஸ்லிம்கள் சார்பில் எம்.ஐ.எம். மொஹிதீன் என்பவரும் கையொப்பமிட்டதுடன் கூட்டறிக்கையும் வாசிக்கப்பட்டது.

அந்த உடன்படிக்கையில், 'தமிழீழத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தமிழ் மொழியை பேசினாலும் அவர்கள் வேறுபட்ட தனி இனம் என்றும், வடகிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு எவ்வாறு பாரம்பரிய தாயகமாக உள்ளதோ, அதேபோல முஸ்லிம்களினதும் பாரம்பரிய தாயகமாகும்.

தாயகத்தில் தமிழர்கள் எவ்வாறு அரசியல் உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிக்கின்றார்களோ, அதேபோல் முஸ்லிம்களும் அனுபவிக்க முழு உரிமையும் உடையவர்கள்.

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அவர்கள் அச்சம், பயம், சந்தேகமின்றி வாழ்வதற்கான அனைத்து உத்தரவாதத்தினையும் புலிகள் சட்டரீதியாக உறுதிப்படுத்துவார்கள் என்றும்,

கிழக்கில் 33 வீதமாக இருந்த முஸ்லிம்கள், வடகிழக்கு இணைப்பின் காரணமாக 18 வீதமாக குறைக்கப்பட்டார்கள். அதனால் மாகாணசபையில் 30 வீதத்துக்கு குறையாத பிரதிநித்துவத்தை முஸ்லிம்களுக்கு வழங்குவதுடன், அமைச்சரவையில் இடம் வழங்கப்படுவதற்கும் சட்ட ஏற்பாடுகளை செய்தல்.

அரச காணிப்பங்கீட்டில் கிழக்கில் 35 வீதத்துக்கு குறையாமலும், மன்னார் மாவட்டத்தில் 30 வீதத்துக்கு குறையாமலும், வடமாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 5 வீதத்துக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

கல்வியில் சமவாய்ப்புக்கள் பேணப்படுகின்ற அதேநேரம், விகிதாசாரப்படி வேலை வாய்ப்புக்களை வழங்குவதுடன், முஸ்லிம்களுக்காக தனியான இஸ்லாமிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

வடகிழக்கு மாகாணசபையில் பிரதி முதலமைச்சராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்படும் வகையில் சட்ட ஏற்பாடுகளை செய்தல் என்றும்,

தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் காரணமாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினை களையும் பொருட்டு ஒரு குடியகல்வு கொள்கையினை உருவாக்குதல்'

போன்ற விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் பிரதானமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்துக்கு பின்பு பல முஸ்லிம் இளைஞ்சர்கள் விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டு ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டார்கள். முஸ்லிம்களின் கிராமங்கள் நகரங்கள் எங்கும் புலிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம் கிராமங்களில் பாதுகாப்பாக இருந்தவாறே புலிகள் தமிழினப்படுகொலைகளை அக்காலகட்டத்தில் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1990 இல் புலிகளுக்கும் பிரேமதாசாவுக்குமான தேனிலவு நிறைவுபெறுவரை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப்படுகொலைகளுக்கு முஸ்லிம்களின் பூரண ஆதரவு கிடைக்கப்பெற்றது. அதற்கு பிரதியீடாக முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட தமிழ் இளைஞர்கள் மாற்று இயக்க உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது பலரும் அறியாத வரலாறு. (குறிப்பாக முஸ்லிம் எதிர்ப்பில் தீவிரம் காட்டிய ஈஎன்டிஎல்எப் ன் முக்கிஸ்தர்கள் இருவர் முஸ்லிம்களின் முக்கிய பிரமுகர்கள் முன்நிலையில் கொல்லப்பட்டதாக அக்காலத்தில் மக்கள் பரவலாக பேசிக்கொண்டனர்)

ஆனால் பிறேமதாஸவுடனான தேன்நிலவுக்காலத்தில் வடக்கில் முஸ்லிம்களுடன் ஒட்டியுறவாடிய புலிகள் தேனிலவு முடிந்தபின்னர் முஸ்லிம்களுக்கும் பிறேமதாஸவிற்குமிடையேயிருந்த உறவு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை உணர்ந்து பிறேமதாஸவை நோகடிக்கும் நோக்கில் யாழ் முஸ்லிம்களையும் விரட்டினர். புலிகளுடன் இணைந்திருந்த பல முஸ்லிம் இளைஞர்களை கொன்று குவித்தனர். இவையாவற்றுக்கும் கிழக்குமாகாணம் விலைகொடுத்தது. முஸ்லிம்களின் வெறியாட்டத்தால் கல்முனை நகரத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக பிணவாடை வீசியது.

தங்களுக்கு அனுகூலம் அல்லாத வடகிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் எவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளுக்கு போராடுகின்றோம் என்போரையே வைத்து தீர்த்துக்கட்டினார்கள் என்பதையும் அவர்களது அரசியல் சாமர்தியத்தையும் அறிந்து கொள்ளலாம்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com