Friday, June 7, 2019

மீனவரின் வலையில் கிளேமோர் குண்டு! மைத்திரி இலக்கு வைக்கப்பட்டாரா?

கடந்த 1 ம் திகதி பொலநறுவை மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு சந்திப்புக்களை நாடாத்தியுள்ளதுடன் மாகாவலி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விடயங்களை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார்.

அவ்வாறு மெத்திரிகிரிய பிரேதேசத்தில் அவர் மேற்கொண்ட சந்திப்பு ஒன்றுக்கு அருகாமையிலுள்ள வாவி ஒன்றிலிருந்து அதிநவீன வெளிநாட்டுத்தயாரிப்பு கிளேமோர் ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாவியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையிலேயே குறித்த குண்டு சிக்கியுள்ளது. வலையில் இப்பாரிய குண்டு சிக்கியதையடுத்து மீனவர் மெத்திரிகிரிய பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினார். பொலிஸாரின் வேண்டுதலுக்கிணங்க அங்கு விரைந்த இராணுவ குண்டு செயலிழக்கும் பிரிவினர் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இக்குண்டானது கடந்த நாட்களில் பொலநறுவையில் நின்ற மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்திருந்ததா என்ற கோணத்தில் பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com