Monday, June 3, 2019

மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ரத்தன தேரரை பார்வையிட சென்றது தவறாம். போப் ஆண்டவரிடம் முறையிடுகின்றார் மங்கள

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அத்துரலியே ரத்ன தேரரை நலம் விசாரிப்பதற்காக கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சென்றமை தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, காவி அணிந்த பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரரை நலம் விசாரிக்க அவ்விடத்திற்கு சென்றது, இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்து எத்தனிப்பதாக தெரிகின்றது.

போப் ஆண்டவர் மற்றும் வத்திகான் செய்திச் சேவைக்கு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் இந்த செயலை அவதானிக்குமாறும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com