Wednesday, June 26, 2019

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 6 - யஹியா வாஸித்.

நோகாம நொங்குதின்கிற கத இது.

யார் என்ன சென்னாலும் சிறிலங்காவுல இருக்கிற, வாழுற சோனவனுகளுக்கிட்ட ஒரு கெட்ட பழக்கமிருக்கின்றது. இந்த மொத்த காக்காமாரும், ஒரு குட்டி மயிர கட்டி, பாரிய மலகள இழுப்பானுகள். கம்மோ கோ.
கண்ண பொத்திக்கிட்டு தனி ஆளா நிண்டு இழுப்பானுகள்.

தைரியமா இழுப்பானுகள், தமிழ் மக்கள் எல்லாம் இந்த கூத்த ஓரக்கண்ணால, தூரநிண்டு பாப்பாங்க, சிங்கள நண்பர்களோ, ஆச்செரியமா எட்டி நிண்டு பாப்பாங்க. கப்சிப். இவன் இழுப்பான்.

இந்த மடையன் வெறித்தனமா இழுப்பான், ஒரு நேக்கா இழுப்பான். மயிரை கட்டி பெரு மலைகளையே இழுப்பான். மயிருக்கும் நோகாம , மலைக்கும் நோகாம. ஒரு நேக்கா, கொஞ்சம் வாகாக நிண்டு இழுப்பானுகள்.

நேரடியா சொல்றண்டா, பெற்றோளுக்குள்ளால எரியிற லாம்ப கொண்டுபோற வெளையாட்டு இது. லாம் பெண்ணெக்குள்ளால, லாம்ப கொண்டு போறதுக்கே நம்மாள் தயங்குவான், நூறுதரம் யோசிப்பான், படிச்சவன் நாலு பேருக்கிட்ட அய்டியா கேப்பான். பயந்துடுவான். ஐய்யன்னா, நாவவன்னாவுக்கெல்லாம் போவான்.

ஆனா நம்மாள் ஆர்ர அய்டியாவும் கேக்க, கீக்க மாட்டான், பொண்டாட்டி, புள்ள குட்டிக்கிட்டையும் சொல்ல மாட்டான். தனியாளா நிண்டு, நிதானமா, கொஞ்சம் சாக்கிரதையா இழுப்பான். இவன் முருகண்ட பரம்பர, புள்ளயார் மாதிரி டைம் வேஸ்ட் பண்ணமாட்டான்.

சீவன் போகும், கண் ரெண்டும் பிதுங்கும், தொண்டக்குழி வத்தும், நடந்து, நடந்து, கந்தோர் கந்தோறா ஓடி, ஓடி நாடி நரம்பெல்லாம் பதறும், அடுத்த ஊட்டுக்கரன், சொந்தக்காரன், மச்சான், மாமா, நண்பன், நண்பன்ட நண்பன், எல்லாருக்கிட்டயும் மூணு மாதத்துல, ஆறுமாதத்துல திருப்பி தாரன் எண்டு, வாங்கிய கடன்கள் முன்னுக்கு வந்து நிண்டு பல்லிளிக்கும், பொண்டாட்டி ஊட்ட உட்டு தொரத்துவாள், ஓளைக்க தெரியாத நாயே எண்டும் திட்டுவாள் , ஈரக்கொல திமிரும், அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ், யா அல்லாஹ், வெல்லோனும், இந்த கேம வெல்லோனும் எண்டு ஓடுவான், மேலிடம், கீழிடம், டையினம், வல்லினம், மெல்லினம் எல்லாத்தையும், ஜாலியா ரூவாவ வீசி மடக்குவான், புரியாணி, வட்டிலாப்பமெல்லாம், ஏலக்கா கம கமக்க, அதிகாரிகளின் குசினி வர பறக்கும், வேணுமெண்டா கால்ல உளுவான், சாஷ்டாங்கமா, நெடுஞ்சான் கெடையா உளுவான். வெட்கமே படமாட்டான்.

ஹ்ம்ம்ம் . சாதிச்சுடுவான், நம்மாள் சாதிச்சுடுவான். அல்ஹம்துலில்லாஹ் சாதிச்சுடுவான். டிகிரி ஹோல்டர், டபுள் டிகிரி ஹோல்டர், டாக்குத்தர், இஞ்சினியர், அற்றோனியற் லோ, பாரீஸ்டர் இருவத்தி அஞ்சி வருசமா
சாதிக்காதத, நம்ம நாலாங் கிளாஸ் ஆறு மாதத்துல சாதிப்பான்.

இதெப்படி மூன்று, நாலினம் வாழும் சிறிலங்காவில், ஜஸ்ட் எட்டே வீதம் உள்ள இந்த குட்டி இனம் மட்டும் புற்றீசல் போல சாதிக்கிறதே !!!! ????

எல்லா இடத்திலும், எல்லா சபைகளிலும், நாங்க ஆளுமையற்ற சமூகமாகவே இருந்துள்ளோம், வாழ்ந்துள்ளோம். ஜஸ்ட் தம்பிலா, கள்ளத் தோணிகள். காக்கா.

புள்ள பூச்சிகளாகவே கணிக்கப்பட்டுள்ளோம். பத்தோடு பதினொன்றாக வாழ்ந்துவிட்டு போகட்டும் என்றுதான், சிங்கள மக்கள், சிங்கள தலைவர்கள், சிங்கள பவுத்த பிட்ச்சுக்கள் எங்களை இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ விட்டுள்ளார்கள்.

யெஸ் கிரேட், அதுதான் நியதியும்கூட. அப்படித்தான் வாழ்ந்தோம், ஆனால் வட கிழக்கில் நெருக்கடி, பாரிய நெருக்கடி, குட்டி குட்டி இன முறுகல்கள், but அது ஒரு, மச்சான், மச்சினன் சண்ட மாதிரி, சக்களத்தி
சண்ட மாதிரி இருந்தாலும், ஒரு வடு, ஆறாத வடு எங்கேயோ புரையோடிக் கொண்டிருந்திருக்கின்றது.

வடக்கில் நாங்க ஒரு கேட்பாரற்ற, பட் மதிக்கப்பட்ட சமுகமாக வாழ்ந்தாலும், கிழக்கில் எப்போதும் கேள்விக் குறியாகவே இருந்துள்ளோம்.

இது கிழக்கில் உருவான முறுகல் அல்ல, ராமநாதபுரம், தேனீ, உசிலம்பட்டி, கொட்டாம்பட்டி, திருச்செந்தூர் பகுதிகளில், நாங்கள், இஸ்லாம் மார்க்கத்தை தழுவ முதலும், தழுவிய பின்னும் ஆரம்பித்த முறுகல்.

அந்த முறுகலை, மூர்க்கமாக மாற்றி, மோதி, முட்ட, யாரிடமும் பலமும் இருக்கல, பணமும் இருக்கல. தில்லும் இருக்கல, ஆம் எல்லாருமே கொறஞ்ச சாதி. ஒரே வயிற்ருப் பிள்ளைகள் ,மாமன் மச்சான் உறவு, அவன் பள்ளன் எண்டா நான் பறையன், அவன் நளவன் எண்டா, நான் வண்ணான், அவன் படையாண்ட குடி எண்டா, நான் வடக்கன்னாகுடி, உயர்சாதி ஹிந்துக்களைவிட்டு தூர ஓட வழிதான் தேடினோமே தவிர, மோத வழி தேடவில்லை.

ஓடினோம், ஓடினோம். பொத்துவில் - சோனவன், கோமாரி -கிறிஸ்டியன், திருக்கோயில், தம்பிலுவில் - தமிழர், அக்கரைப்பற்று - தமிழர், சோனவன் , அட்டாளைச்சேனை - சோனவன் , மீனோடக்கட்டு - தமிழர், பாலமுனை, ஒலுவில் - சோனவன் , அட்டப்பள்ளம் - தமிழர், நிந்தவூர் - சோனவன் , காரைதீவு - தமிழர், சாயிந்தமருது - சோனவன் , கல்முனை - சோனவன் ,தமிழர், பாண்டிருப்பு - தமிழர், மருதமுனை - சோனவன், நீலாவணை, ஒந்தாச்சிமடம், கல்லாறு, களுவாஞ்சிகுடி, களுதாவளை, ஆரப்பத்தை - தமிழர், காத்தான்குடி - சோனவன் , மட்டக்களப்பு - தமிழர், ஏறாவூர் - சோனவன், செங்கலடி - தமிழர், வாழைச்சேனை - சோனவன், தமிழர்,

அப்படியே மூதூர், வெருகல், கிளிவெட்டி, கிண்ணியா, திருகோணமலை என மிக்சராக இல்லாமல், புட்டும் தேங்காய்ப் பூவுமாக இருக்க காரணம் என்ன.

எங்கேயோ, எப்போவோ சக்களத்தி சண்டை, மாமா மச்சான் சண்டை, உன் சாதி பெரிசா, எஞ்சாதி பெரிசா என ஒரு குட்டி சண்டை நடந்துள்ளது. சண்டை முற்றி அவனை விட்டு இவன், இவனை விட்டு அவன் கொஞ்ச தூரம் ஒதுங்கி உள்ளான்.

அப்படி ஒதுங்கிய மைனாரிட்டி சோனவன், ரொம்ப யோசிச்சிருக்கான், தலய போட்டு ஓடச்சிருக்கான், யெஸ், இனி நமக்கு யாருமே இல்ல, நாடில்ல, நகரமில்ல, மாமன் மச்சான் உறவுமில்ல, பட் வாழோணும்,
வாழோணும், வாழ்ந்து காட்டோணும், இந்த ஒலகத்துல வாழ்ந்து காட்டோணும், யெஸ், ஐ யம் எலோன், ஐ யம் எலோன். வீ ஆர் எலோன்.

ஒடுக்கப்பட்ட சமுகம், அடக்கப்பட்ட சமூகம், தாழ்த்தப்பட்ட சமூகம், வாழ வழியில்லாத சமூகம், கிடைத்த எல்லாவற்றையுமே பற்றிப்பிடித்திருக்கின்றது. அது கல்லோ, மண்ணோ, புல்லோ, பூண்டோ, கத்தரிக்காயோ, கஸ்தூரியோ எட்டிப்பிடித்து, பற்றிப் படர்ந்திருக்கின்றான். இங்கு இஸ்லாம் மார்க்கமும் அவனுக்கு கொஞ்சம் ஹெல்ப்பண்ணியிருக்கின்றது.

பொய் சொல்றத குறைச்சி இருக்கின்றான், அஞ்சு நேரம் தொழவும் பழகி இருக்கின்றான், மது, மாதில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருந்திருக்கின்றான் கொஞ்சம் நல்லாத்தான் வாழ்ந்திருக்கின்றான்.

தமிழ் சகோதரர்களுடன் நகமும் சதையுமாக உறவாடியிருக்கின்றான், சிங்கள மக்கள் மத்தியில் ஒரு உயர்ந்த ஸ்தானத்தையும் பெற்றிருக்கின்றான்.

இடையில், இடைநடுவில் கொஞ்சம் அரசியல் வந்தது, வந்து எங்களது உள்வீட்டுகளுக்குள் சப்பாணி கட்டி உட்கார்ந்து கொண்டு , கும்மி, கும்மி என கும்மி அடித்து, மொத்த இதயங்களையும் சப்பித்துப்பி, காரி உமிழ்ந்து மண்வெறி பிடித்த சாம்ராட் அசோகனையும் மிஞ்சி, ரத்தவெறி பிடித்த ஹிட்லரையும் விஞ்சி, சாதி, மதம், மானம், மரியாதை எல்லாத்தையும் தொலைச்சி, போகாத ஊருக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றோம்.

எண்ட மூத்தாப்பா, எண்ட உம்மாக்கிட்ட சொல்லுவார், அடியே பைத்தியக்காரி, ஒண்ட புருஷன், அவள், சரஸ்வதிட மகன், பொன்னம்பலத்துக்கிட்ட அந்த ரெண்டேக்கர் காணிய வேண்டுறான், நீயும் படிக்கல, நானும் படிக்கல, பொன்னம்பலமும் படிக்கல, ஒண்ட புருஷன் கொஞ்சம் படிசிருக்கான்.

உறுதிய( ஒப்பினை / காணி பத்திரம் ) டீ ஆர் ஓ கந்தோருக்கு கொண்டு போய், நல்லா படிச்ச யாழ்ப்பாணத்தான் இருக்கானுகள், அவனுகளுக்கு முன்னுக்கு வச்சி , ஒரு தரத்துக்கு, ரெண்டு தரம், பொன்னம்பலத்துக்கு வாசிச்சி காட்டச் சொல்லி, காணிய வேண்டச் சொல்லு, இல்லாட்டி, பொறவு பொன்னம்பலத்துர பேரப்புள்ளகள் வந்து, நம்ம புள்ளகளுக்கிட்ட சண்ட புடிப்பானுகள், நாம அவங்கட அப்பாவ ஏமாத்தி, கீமாத்தி காணிய வேண்டிற்றோம் எண்டு.

வேத வாக்கு. கிளவண்ட வாக்கு வேத வாக்கு. என் நண்பன், தமிழ் நண்பன், என் பள்ளி தோழன், ஊராண்ட ஊட்டு கோழிய அறுத்து ரெண்டுபேரும் ஒண்டா திண்டிருக்கம், சினிமா கொட்டகைகளில் லூட்டி அடிச்சிருக்கம், அவன் தந்த லவ் லெட்டர, விஷயம் தெரியாம, அவன்ட கேர்ல் பிரெண்டுட தங்கச்சிக்கிட்ட குடுத்து, ஊர்காரனெல்லாம் என வெரட்டி வெரட்டி அடிச்சிருக்கானுகள், பாண்டிருப்புல இன்னம் என்ன தேடிக்கிருக்கானுகள், அந்த வடு, அந்த காயம் இன்னம் என்ர ஓடம்பில இருக்கிறது, போடா போய் துப்பாக்கி பயிற்ச்சியாவது எடுதுவாடா நாயே, என்று உத்தரப் பிரதேசத்துக்கு அனுப்பி வச்சவனும் அடியேன்தான்..

வந்து நின்றான், என் உயிரினும் மேலான என் ஆருயிர் நண்பன் வந்து நின்றான், துப்பாக்கி பயிற்ச்சி எல்லாம் எடுத்து முடிந்து, ஊருக்குள்ள வந்து, சோனவனுகளுக்கிட்ட காசு அறவிடுகின்ற ஒரு கால கட்டத்தில, ஒரு நாள் என்ர வீட்டுக்கு முன்னுக்கு வந்து நின்று, ஒரு பழைய கடிதத்தை காட்டி, மச்சான், இந்த அக்கரபத்து மார்க்கட் அமைந்துள்ள மொத்த காணியும், காரதீவை சேர்ந்த ஒரு தமிழ் பெண்ணுடையது மச்சான், இந்த சோனவனுகள், அந்த பொம்பளைய ஏமாத்தி அந்த காணிய வாங்கி இருக்கானுகள் மச்சான் .

என்னத்தை சொல்வது, எப்படி சொல்வது, எங்க போய் சொல்வது, எந்த மலையில போய் முட்டுவது, ஆனால் நான் ஒரு சோனவன் என்றும் பாராமல் என்னிடம் வந்து சொன்னதுதான் எமது நட்பின் அதி உச்சம். அந்த அளவுக்கு நான், நாம் தமிழ் நண்பர்களினதும் , தமிழ் மக்களினதும் இதயக்கூட்டுக்குள்ள இருந்தம். இருக்கிறம்.

நண்பன் வெறியோட சொன்னான், நான் கிலியோட சிரிச்சன். போடா நாயே எண்டுப்போட்டு போயிட்டான்.

அப்புறம், ரெண்டு மாதத்துக்கு அப்புறம், ஒரு சுப யோக, சுப தினத்தில், அக்கரைப்பற்று சந்தை சதுக்கம் எரிந்து சாம்பரானது. யெஸ் ...யெஸ் ...யெஸ் ... யெஸ் ...யெஸ் ...யெஸ் ...என் ஆருயிர் நண்பனின் வழிகாட்டலில், முப்பத்தி முக்கோடி இயக்கங்களின் மத்திய செயற்குழுக்களின் தீர்மானத்திட்கேட்ப , சூர சம்ஹாரம் ஆடியதாக என் நண்பன், பின்னொருநாளில், மெட்ராஸ் அங்கப்பனாயக்கன் தெருவில் வைத்து சொன்னான். எரிந்த கடைகளில் முதல் கடை எங்கள் கடை, அந்தக்கடையில் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள், நானும் அவனும், வாழ்வாங்கு வாழ்ந்துள்ளோம் என்பதுதான் ??????. ரொம்ப
சந்தோசமான செய்தி. it is on record....it is on record..... it is on record.....

கிட்டதட்ட மூவாயிரம் பேர் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள், ஒரு பத்தாயிரம் பேர் மறைமுகமாக பாதிக்கப்பட்டார்கள்.

பின்னாளில், இன்னொரு அந்தி சாயும் வேளையில் என் நண்பனையும், வளர்த்த கடாக்களே, நாலு, குட்டி, த்ரீ பாயிண்ட் டூ குண்டுகளுக்கு இரையாக்கி இருந்தன. என் உயிரினும் மேலான நண்பன், மண்ணில் வீழ்ந்து விட்டான் என்ற செய்தி, ஆறாயிரம் மைலூக்கப்பால் இருந்த எனக்கு, காற்று வாக்கில் வந்து சேர்ந்தது. அந்த நாய், இன்னும், இன்னும் என்னுடன் வாழ்ந்திருக்கலாம். அவன் ஒரு பக்கா ஜென்டில் மேன்.

இது எங்கள்,எனது குட்டி அனுபவத்தின் ஒரு மைக்ரோ துளி. இந்த துளியை, துரும்பாக்கி, துரும்பை, துப்பாக்கியாக்கி, துப்பாக்கிகளை துரியோதனர்களிடம் கொடுத்ததனால் வந்த வினையின், வீம்பின், வீரியங்கள்தான் இன்று, பிரித்துத்தா அல்லது சோனியின் கழுத்தை வெட்டித்தா என்பதில் வந்து நிற்கிறது ..???

நோர்வேக்காரன் கோட்டையும், சூட்டையும் காட்டி, வன்னிகாட்டுக்குள், இருந்த கன்றுக்குட்டிகளை அழைத்த போதே நாம் இலங்கைநெட் இணையத்தளத்தில் ரெண்டாயிரத்து ஆறில், ஏழில் எழுதினோம், கத்தி கூப்பாடு போட்டோம்.

ராசாக்களே, ராஜ குலோத்துங்கர்களே, கொஞ்சம் கோட்ட கீட்ட போட்டு, பழக்கி, சிறு நகரங்களை, மெதுவாக பெரு நகரங்களை காட்டிபுட்டு, நம்ம வன்னி குழந்தைகளை எலெக் ரோனிக் நகரங்களுக்கு அனுப்புங்கள்,
இல்லாவிட்டால், மாறிடுவான், நம்மவன் மாறிடுவான் என்று சொல்லி மன்றாடினோம்...நெத்தின்க் ஹெப்பென்.

கருணா அம்மான் மாறினார், கிழக்குக்கு வந்து அறிக்கை விட்டார், வடக்கு வேற, கிழக்கு வேற. நாங்க சந்தோசப்பட்டோம், நான் சந்தோசப்பட்டேன், கிழக்கின் புதல்வன், கிழக்கை பற்றி யோசிக்க கூடிய ஒரு மாவீரன் வந்துவிட்டான் என்று ரொம்ப சந்தோசப்பட்டோம்.

கொஞ்சம் பயமும் வந்தது. பொத்துவில், பாணமை, குடும்பிமலை தொடக்கம் திருகோணமலை வரையுள்ள சாதாரண தமிழர்களும், அந்த தமிழர்களின் வாழ்விடங்களும், அவர்களின் தொழில்துறைகளும் நொந்து நொம்பலமாகிக் கெடக்கிறதே,

மொத்த சோனவனின் வளங்களும் உச்சானிக் கொம்பில் ஏறி இருக்கின்றதே, இத பார்த்துபோட்டு மனுஷன் தடுமாறுவாரே, சோனவன் மேல கோபம் வருமே என்ற ஆதங்கத்தில் , இலங்கைநெட் இணையத்தளத்தில் கிழக்கு மாகாணத்தை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவது எவ்வாறு, என்ற அடிப்படையில் "கருணா என்கின்ற முரளீதரனுக்கும், கிழக்கு மாகாண மக்களுக்கும் " என்ற தலைப்பில் பதினாலு தொடர் கட்டுரைகள் எழுதினோம்.

நம்ம கருணா அம்மானும் கண்டு கொள்ளல, அவர்ர பாசறையில் வளர்ந்த பிள்ளையானும் கண்டு கொள்ளல, அந்த பட்டாளங்களுடன் வளர்ந்த அடிப்பொடிகளும் கண்டு கொள்ளல. எல்லோரும் கொழும்புல போய்
ஜாலியா, கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துள்ளார்கள்.

ஆனால் சோனவன் இந்த கட்டுரைகளை கண்டு வீடு தேடி வந்தான், சில முஸ்லிம் இளைஞர்கள் கட்டார், துபாய்களில் இருந்து வேலைகளை தூக்கி வீசி விட்டு கிழக்கிற்கு போய் தொழில் தொடங்கினார்கள். அந்த
வளங்களை சிறப்பாக பாவித்தார்கள். இத்தாலியில் இருந்த அம்பாறை சிங்கள இளஞர்கள் மூன்று பேர் நேரடியாக என்னை வந்து சந்தித்து, அம்பாறை உகனையில் தொழில்சாலைகளை தொடங்கினார்கள். பலர்
மீன் வியாபாரத்தில் கொடி நாட்டினார்கள்.

ஆம், பொறாமை வரவேண்டும், அது பொல்லாமையாக இருக்க கூடாது. கருணா அம்மானும், பிள்ளையானும் கிழக்கு மாகாண தமிழனுக்கு என்ன செய்தார்கள்,எத்தனை தொழில்சாலைகளை ஆரம்பித்து கொடுத்தார்கள், இந்த மகான்களால் எத்தனை தமிழச்சிகளின் வீட்டில் அடுப்பெரிந்தது, ஏன் அவர்களுக்கு பின் வந்த, வந்துள்ள இந்த எம்பி, தும்பிக்களெல்லாம் எத்தனை காய்களை நகர்த்தி உள்ளார்கள். எத்தனை
சிங்கள எம்பிக்கள், மந்திரிகள், அதிகாரிகளின் காலில் விழுந்து சாதித்துள்ளார்கள்.

தமிழனுக்காக நீ வாழ்வதானால், எந்த குப்பையிலாவது விழுந்து சாதிக்கொனும். ஒவ்வொரு தமிழனின் வீடுகளிலும் அடுப்பெரியோனும். அதுவரை நாம் சாக கூடாது. அரசியல் தொடர்ந்து சோறு போடாது. நாம் தமிழ்
பத்தினிகளுடன் வாழ்ந்துள்ளோம். அவளுகள் வாய் தொரக்கோணும், தொறந்து, அடேய் புள்ளகளே !!!! மொதல்ல எங்களுக்கு சோத்துக்கு வழி பண்ணுங்கடா என்று சாபம் போடணும் ..அதன் பின் தமிழ் கிராமங்கள் தோறும், சோனவனுக்கு போட்டியாக பில்டிங்குகள் வானுயர முளைக்க வேண்டும்.......

அத செய்யுறத உட்டு போட்டு அனைவரும் நோகாமல் நொங்கு திங்கிற வேலைகளைத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். சரி ஹிஸ்புல்லாஹ் பள்ளிக்ககூடம் கட்டியிருக்கார் , ஊரா ஊட்டு காணில கட்டி இருக்கார், கிட்டத்தட்ட அது ஒரு மாயாபஜார். அது ஊருக்கே தெரிந்த விடயம்.

ஆனால் அவர் எத்தனை அரபிகளின் காலில் விழுந்திருப்பார், எத்தனை சிங்கள அதிகாரிகளின் பின் புறத்தை நக்கி இருப்பார், எத்தனை தமிழ் கிராம சேவையாளர்கள், சேர்வையர்களுக்கு ஆராத்தி எடுத்திருப்பார்,
இவர்கள் யாரினதும் ஆதரவில்லாமலா ஹிஸ்புல்லாஹ் கண்ணுக்கு தெரியாத அந்த கட்டிடத்தை கட்டி இருப்பார். ரிசாட் பதுயுடீன் மீண்டும், மீண்டும், மீண்டும் வர்த்தக அமைச்சை எடுத்திருப்பார், ஆஸாத் சாலி என்ன வானலோகத்தில் இருந்து வந்தா, கொழும்பு மேயர் கதிரையை பிடித்திருப்பார், கபீர் ஹாசீம் பெற்றோலியம் துறையை மொத்த சிங்கள புத்த பிக்குகளுக்கும் தெரியாமலா பறித்திருப்பார்.

பாவம், தமிழர்களும், சோனவனும் !!!!!! எப்போதுமே, எப்போவுமே சிங்கள புத்திசாலிகளே வென்றுள்ளார்கள், வெல்கின்றார்கள், வெல்லுவார்கள்.

yes, they are always mastermind.
I like them. I love them.


( அடுத்த வாரம் நம்ம தமிழ், சிங்கள எம்பிக்களையும், சோனக அலிபாப்பாகளையும்
பற்றி கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம் ......)

( இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் தொடருவேன் .....)
yahiyawasith@ymail.com
21-6-2019

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com