Thursday, June 27, 2019

கோட்டா பயம் உச்சக்கட்டத்தில்! அமெரிக்க நீதிமன்றில் மேலும் 10 பேர் வழக்கு தாக்கல்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ம் திகதிக்கு முன்னர் நடைபெறவுள்ளது. அத்தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மல்லிகைமொட்டு சார்பில் வேட்பாளராக களமிறங்குவதற்கான ஏதுநிலைகளை காணப்படுகின்றது.

கோத்தபாய ராஜபச்ச தேர்தலில் குதித்தால் பௌத்த சிங்கள வாக்குகளால் பெருவெற்றிபெறுவார் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே தேர்தலில் கோத்தபாயவை எதிர்கொள்ள முடியாத சக்கிகள் அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊள்நாட்டில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை செய்து சிறையில் அடைத்தல் அல்லது அமெரிக்க பிரஜாவுரிமையை வாபஸ் பெற்றுக்கொள்ள முடியாதவாறு தடுத்தல் என்ற இரு வியூகங்களை அவர்கள் வகுத்துள்ளனர். அமெரிக்காவில் வழக்குகளை தொடுப்பதன் ஊடாக வழக்கொன்று நிலுவையில் உள்ளபோது பிரஜாவுரிமையை வாபஸ் பெற்றுக்கொள்வதில் தாமதத்தை அல்லது சிக்கலை உருவாக்கல் என்பதே கோத்தாவின் எதிராளிகளின் வியூகம்.

இத்தேர்தலில் கோத்தாவின் பிரதான எதிராளிகள் ஐக்கிய தேசியக் கட்சியனரே. அவர்கள் குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்றுவதற்காக புலம்பெயர் புலி ஆதரவாளர்களை பயன்படுத்துகின்றனர்.

ஆதன் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக, அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் மேலும் 10 பேர் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகளுடன் நேற்று வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான படையினர் மற்றும் பொலிஸார் தமது அரசியல் எதிரிகளை சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்படுத்தினர் என்று மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேர் நேற்று வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களில் 6 பேர் தாங்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர் எனவும், பாலியல் தாக்குதல்களுக்குள்ளாக்கப்பட்டனர் எனவும் கூறியுள்ளனர்.

உளவியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தாங்கள் மிக மோசமான துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாக இவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது ஒரு தனியான சம்பவங்களோ, எங்காவது ஒன்றாக நிகழ்ந்தவையோ அல்ல எனப் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு சட்டவாளர்களில் ஒருவரான, ஸ்கொட் கில்மோர் ஏபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இது நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாகும், இதற்கு கோட்டாபய ராஜபக்சவே தலைமை தாங்கியிருந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் குற்றங்கள் 2008ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றன என்று கூறப்பட்டுள்ளது,

கடத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டு இராணுவ முகாம்களிலும், பொலிஸ் நிலையங்களிலும் ஆண்களும் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் கனேடியத் தமிழரான றோய் சமாதானம், கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான மூல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

மேற்படி நபர் இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகள் பலருடன் கூட்டுச்சேர்ந்து சட்ட விரோத வியாபாரங்களை மேற்கொண்டபோது, ஏற்பட்ட சிக்கலில் சட்ட விரோத பொருட்களுடன் கையும் மெய்யுமாக பிடிபட்டு அதற்கான தண்டனையை பெற்றவர். இவர் தற்போது இலங்கையில் அரசியல் கட்சி ஒன்றின் எடுபிடியாக மாறியுள்ளார் என்பது யாவரும் அறிந்த விடயம்.

இந்த வழக்கில் நேற்று திருத்தம் செய்யப்பட்டு, அவருடன் மேலும் 8 தமிழர்கள் மற்றும் 2 சிங்களவர்கள் என மொத்தமாக 11 பேர், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

'தனது கட்டுப்பாட்டில் உள்ள படையினரால் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் பெருமளவில் செய்யப்படுகின்றன என்பதை கோட்டாபய ராஜபக்ச அறிந்திருந்தார் அல்லது அறிந்திருக்க வேண்டும்.

இந்த முறைகேடுகளைத் தடுப்பதற்குப் பதிலாக, அவர் அவர்களை ஊக்குவித்தார் அல்லது சகித்துக்கொண்டார்.

குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர் நீதிக்குத் தடையாக இருந்தார். மேலும் சாட்சிகளை மரண அச்சுறுத்தல் செய்தார்' என்று இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்ட விசாரணைகளுக்குப் பின்னர் தென்னாபிரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட சர்வதேச உண்மை நீதிக்கான திட்டம், சர்வதேச சட்ட நிறுவனமான ர்யரளகநடன உடன் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

இங்கு தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டிய விடயம் யாதெனில் கோத்பாய ராஜபக்ச ஜனாதிபதியாவதை தடுத்து ஐக்கிய தேசியக் கட்சியை அரியாசனம் ஏற்றுவதன் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா அதற்கு உத்தரவாதம் உண்டா என்பதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com