Saturday, May 4, 2019

பயங்கரவாதிக்கு „தாய்" அந்தஷ்த்து கொடுக்க முற்பட்ட பஷீர் சேகுதாவூத் அம்மணமாகி நிற்கின்றார்.

கடந்த 26 ம் திகதி சாய்ந்தமருதில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுற்றிவளைக்கப்பட்டபோது 3 தற்கொலைதாரிகள் குண்டுகளை வெடிக்க செய்து கொண்டதில் 6 குழந்தைகள் கொல்லப்பட ஒரு சிறுமி அபூர்வமாக உயிர்தப்பியிருந்தாள்.

அச்சிறுமி எவ்வாறு தப்பினாள் என்பது தொடர்பான உண்மைத் தகவல்கள் வெளிவருவதற்கு முன்னர் முண்டியடித்துக் கொண்டு சிறுமியின் படத்தினை தனது முகநூலில் பதிவேற்றிய பசீர் சேகுதாவூத், சஹ்ரான் என்ற பயங்கரவாதியின் மனைவியான பயங்கரவாதி பாத்திமா சாதியாவிற்கு „தாய்" என்ற அந்தஷ்தை வழங்கியிருந்தார்.

அந்த பயங்கரவாதிக்கு பசீர் „தாய்" என்ற ஸ்தானத்தை வழக்க காரணம், குண்டு வெடிப்பதற்கு முன்னர் அவள் தனது குழந்தையை பாதுகாப்பாக தூர வீசினாளாம் என்பதாகும். ஆனால் அவள் ஒரு தாயாக இருந்திருந்தால் குண்டுதாரிகளுடன் இணைந்திருந்திருப்பாளா? அதுவும் அந்த குண்டுதாரிகளுள்ள உயிருக்கு ஆபத்தான இடத்தில் தனது குழந்தைகளை வைத்திருந்திருப்பாளா? என்ற அடிப்படை கேள்விகளைக்கூட கேட்க பசீர் தவறியிருக்கின்றார்.

ஆனால் அங்கு நடந்தது இதுதான். குறித்த வீட்டினுள் 17 பேர் இருந்துள்ளனர். வீடு முற்றுகைக்குள்ளானபோது அவர்கள் யாவருமே தமது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதற்கே தயாராகியுள்ளனர். அச்சமயத்தில் அவ்வீட்டிலிருந்த தொழுகையறையில் பாத்திமா தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே குண்டுகள் வரவேற்பறையில் வெடித்துள்ளது. அவளும் அவளது மகளும் உயிர் தப்பினர். படையினர் அதிகாலையில் உள்நுழைந்தபோது குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட அவள் எழுந்து கொள்ள முடியாத நிலையிலேயே காணப்பட்டுள்ளாள். அவளால் எழுந்திருக்கக்கூடிய நிலை இருந்திருக்குமாக இருந்தால் அவள் அக்குழந்தையை கொன்றுவிட்டு ஏதாவது ஒருவகையில் தற்கொலை செய்திருப்பாள் என்றே நம்மப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் சொர்க்கத்தில் அனுபவிக்க துடிப்பவர்கள்..

இந்நிலையில் அப்பட்டமான பொய்பிரச்சாரம் ஒன்றை செய்து பயங்கரவாதி பாத்திமாவிடமும் தாயுள்ளம் இருந்தது என்ற விடயத்தை மக்கள் மனதில் பதியவைக்க முனைந்ததன் ஊடாக தன்னுள் இறுக பூட்டிவைத்திருந்த அடிப்படைவாத கரும்நாகத்தை பசீர் தன்னை அறியாது வெளியே விட்டுள்ளார்.

பசீரினுள் ஒழிந்திருந்த அடிப்படைவாத கருநாகம் கக்கிய விசத்தின் நோக்கம் விளங்காத இழித்தவாயர்கள் குறித்த பிரச்சாரம் தொடர்பான உண்மை தன்மையினை கேள்விக்குட்படுத்தாது அவருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த சிறுமியை தத்தெடுப்பதற்கு தான் தயாராக உள்ளதாகவேறு சேகுதாவூத் தனது விருப்பினை வெளியிட்டுள்ளார். இதனூடாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அவமானச் சின்னத்தை தனதுகொல்லைக்குள் கொண்டுவந்தால் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் வாக்குகளை வெட்டி தனது பெட்டிக்குள் பூட்டமுடியும் என்பது அவரது வியூகம்.

அது அவ்வாறு இல்லை என்றால், இலங்கையிலே 26 வருட யுத்தம் இடம்பெற்றது. இதன் கொடுமை; இலங்கை முழுவதுக்கும் அனாதைக்குழந்தைகளை பரிசளித்தது. குறிப்பிட்டே சொல்வதானால் புலிப்பயங்கரவாதம் காத்தான்குடி பள்ளிவாயலில் ஆடிய கோரத்தாண்டவத்தால் எத்தனை குழந்தைகள் அநாதைகள் ஆனார்கள். அவ்வாறு அனாதைகளாக்கப்பட்ட எந்தவொரு குழந்தையையும் தத்தெடுக்க முயலாத பசீர் சேகுதாவுதுக்கு தனியே சஹ்ரானின் குழந்தையில் ஏற்பட்ட பரிவு யாது?

தமிழர் பயங்கரவாதிகளை மாவீரர்கள் என்று போற்றி வணங்கிவிட்டு வெட்கி தலைகுனியாது வரலாற்றை கடந்து செல்லுகின்றபோது, இன்று முஸ்லிம் சமூகம் பயங்கரவாதிகள் நிம்மதியாக உறங்குவதற்கு தங்களது மையவாடிகளில் கூட இடமளியாது ஓர் சிறந்த உதாரணத்தை நிலைநிறுத்தி இந்த இழிசெயலை எதிர்காலத்தில் செய்வோருக்கும் இதேநிலைதான் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஆனால் பசீர் சேகுதாவூத் போன்ற அரசியல்வாதிகள் குறுகிய இடைவெளியினுள் புகுந்து எரிகின்ற வீட்டில் பிடுங்கினது மிச்சம் என்ற அவமானகரமான அரசியலை முன்னெடுக்க முனைவது கண்டனத்திற்குரியது.

பசீர் அடிப்படைவாதத்திற்கு எதிரான கருத்துக்களை பரந்தவெளியில் அச்சமின்றி வைத்தாலும், மேற்படி செயற்பாடு அவரது கருத்துக்களுடன் முற்றிலும் முரண்படானதாகும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com