Saturday, May 4, 2019

சம்மாந்துறை காளி கோயிலினுள்ளும் ஆயுதங்கள்.

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள காளிகோயிலிலிருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. குறித்த ஆலயத்தின் வாழைத்தோட்டத்தினுள் சந்தேகத்திற்கிடமான உரப்பை ஒன்று காணப்பட்டதை தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினர் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவித்ததை அடுத்தே இந்த ஆயுதங்கள் மீட்டக்கப்பட்டுள்ளது.

ஸ்தலத்திற்கு விரைந்த குண்டு செயலிழக்கச் செய்யும் விசேட அதிரப்படையினர் ஆலயத்தின் வாழை தோட்டத்தில் ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு ஒன்று, ரம்போ கோடாரி, மற்றும் வாள் ஒன்று என்பவற்றை குறித்த பையிலிருந்து மீட்டுள்ளனர்.

இங்கு குறிப்பிடவேண்டிய விடயம் யாதெனில் முஸ்லிம் பிரதேசங்களில் மீட்டக்கப்படுகின்ற ஆயுதங்கள் யாவும் தேசிய தவ்ஹீத் ஜமாத் குழுவினருக்கு சொந்தமான ஆயுதங்கள் அல்ல.

இவை குறித்த கிராமங்களில் காணப்படும் காடையர்கள் மற்றும் அரசியல் ஏவலாளிகளின் ஆயுதங்களாகும். படையினர் சோதனையிட ஆரம்பித்தவுடன் அவர்கள் இவற்றை இவ்வாறு கைவிடுகின்றார்கள் என நம்ப முடிகின்றது.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com