Friday, May 31, 2019

தலதா மாளிகை முன் அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதம்.

ஆளுனர்களான அசாத் சாலி , ஹிஸ்புல்லா மற்றும் பா.உ ரிசார்ட் பதுயுதீன் போன்றோரை பதவி விலக்ககோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இன்று காலை ஸ்ரீ தலதா மாளிகை முன்னிலையில் உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இன்று காலை பல தேரர்கள் சகிதம் ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்ற அவர் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மாளிகை முன்னிலையில் நிலத்தில் உட்கார்ந்து தனது போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

பாராளுமன்றில் அமைச்சர் ரிசார்ட் பதுயுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை தேரரே கொண்டுவந்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com