Monday, May 20, 2019

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு சாத்தியமா? சட்ட மா அதிபர் திணைக்களத்தை கேட்கிறார் மைத்திரி.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை பொது மன்னிப்பு அளித்த விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

நேற்று ஜனாதிபதி மைத்ரி சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வுக்கு வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார். அப்போது ஞானசார தேரரை சந்தித்திருந்தார். சுpறைச்சாலை அத்தியட்சகரின் அiறியில் அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசினர்.

இதன்போது நாட்டின் தீவிரவாத செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் விரிவாக கூறிய தேரர் , தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராக அனுமதி கோரினார். அவ்வாறு சாட்சியமளிக்க ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தார் ஜனாதிபதி.

சட்ட மா அதிபர் திணைக்கள ஆலோசனை கிடைத்த பின்னர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவுள்ளார்.

இவ்வாறு ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யவேண்டும் என தான் ஜனாதிபதியிடம் வேண்டுதல் விடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா தொலைகாட்சி நேரடி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com