Sunday, April 28, 2019

சாய்ந்தமருதில் கொல்லப்பட்டதில் சஹ்ரானின் தகப்பனும் இரு சகோதரர்களும். மீட்க்கப்பட்டது மகளும் மனைவியும்.

ஈஸ்டர் ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற கொடுரத்தின் மாஸ்டர் மைன்ட் என்று சொல்லப்படுபவர் சஹரான் ஹசிம். இத்தாக்குதலையடுத்து அவரது குடும்பத்தினரை தேடி படைத்தரப்பு வலைவிரித்து பலரை கைது செய்துள்ள நிலையில், நேற்று முன்தினம் சாய்தமருதில் வீடொன்றினுள் குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டவர்களில் சஹ்ரானின் தந்தையும் இரு சகோதரர்களும் அடங்குவதுடன் அதிசயிக்கத்தக்க விதத்தில் உயிர் தப்பியுள்ள சிறுமி அவனின் மகள் என்றும் பெண் மனைவி என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயத்தினை சஹ்ரான் ஹசீமின் மனைவியின் சகோதரான நியாஸ் ஷரீப் மற்றும் அவனின் மனைவியின் குடும்பந்தினர் உறுதி செய்துள்ளனர். அவனது மனைவியின் குருநாகலிலுள்ள வீடு படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகங்கள் அங்கு நுழைந்து மீட்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை காண்பித்தபோது அவர்கள் அழும் காட்சியினை வீடியோவில் காணலாம்.

காத்தான்குடியில் அவர்கள் தேடப்பட்டபோது சாய்ந்தமருதுவுக்கு தப்பியோடி ஒரு வீட்டினுள் நுழைந்த அவர்களை மக்கள் காட்டிக்கொடுத்தபோது, அவ்வீட்டினுள் இருந்தவாறு அவர்கள் வெளியிட்ட விடியோவில் இருக்கும் மூன்று பேர் சஹ்ரான் ஹசீமின் தந்தை மற்றும் இரு சகோதரர்கள் எனவும் இவர் கூறியுள்ளார்.

சஹினி ஹசீம், ரில்வான் ஹசீம் ஆகியோர் சஹ்ரான் ஹசீமின் சகோதரர்கள். அவரது தந்தையான மொஹமட் ஹசீமும் அந்த வீடியோவில் பேசியிருப்பதாக நியாஸ் ஷரீப் கூறியுள்ளார்.

அதேநேரம் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ள அப்துல் காதர் பாத்திமா சாதியா என்ற பெண் சஹ்ரானின் மனைவி என்றும் மொஹமட் சஹ்ரான் ருசெய்னா என்ற ஐந்து வயது சிறுமி அவனது மகள் என்றும் புகைப்படங்களைப் பார்த்து குருநாகலிலுள்ள அவர்களது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேநேரம் இன்று இக்குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்று தேடப்பட்டுவந்து நான்கு பிரதான நபர்கள் இரு வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com