Sunday, April 28, 2019

புர்க்காவுக்கு தடை! மைத்திரியின் அதிரடி அறிவித்தல்..

முகத்தினை அடையாளம் காண்பதற்கு தடையாக இருக்கின்றவைக்கு தடைவிதிப்பதற்கான அறிவித்தலை வீடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

நாட்டில் பாதுகாப்பு நிலைமைகளை சீராக பேணும்பொருட்டு அவசரகாலச் சட்டத்தின்கீழ் இவ்வறிவித்தலை அவர் விடுத்துள்ளார். இத்தடையானது நாளை 29ம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகின்றது.

இதேநேரம் தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஜமியத்துல் மிலத்து இப்றாஹிம் என்ற இரு அமைப்புக்களையும் பயங்கவாத அமைப்பாக தடைசெய்வதாக நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com