Monday, April 8, 2019

சர்வோதயக் காணியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிபொருள் பெட்டிகள் மீட்பு.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலையில சர்வோதய அமைப்பின் அலுவலகத்துக்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் குறித்த வெடிபொருட்கள் ஞாயிற்றுக்கிழமை(7) மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக காணியைத் துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்ற வேளை பெக்கோ இயந்திரம் மூலம் துப்பரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அப் பகுதியில் இரு சந்தேகத்துக்கிடமான பெட்டிகளை அவதானித்த துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின்போது பெட்டிகளில் வெளிமருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று வந்த துப்பரவுப் பணிகள் இடைநிறுத்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com