Sunday, April 7, 2019

ஷரீஆ சட்டத்தை கல்முனையில் நடைமுறைப்படுத்த பள்ளிவாயலில் தீர்மானம் நிறவேறியது. மீறுபவர்களது ஜனாஸா தனிமையிலாம்.

கல்முனையில் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையை முற்றாக தடுக்கும் பொருட்டு ஒழுங்கு செய்யப்பட்ட போதை ஒழிப்புப் பிரகடன மாநாடு நேற்று (06) சனிக்கிழமை கல்முனை முகைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

கல்முனை புகைத்தல், போதைப்பொருள் ஒழிப்பு செயலணியின் ஏற்பாட்டில் அதன் தலைவரான டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்றதுடன் நிகழ்வில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போது உடனடியாக அமுலுக்கு வரும் பிரகடனங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரும் பிரகடனங்கள் என்று இரு வகையான பிரகடனங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

கல்முனைப் பிரதேசத்தில் புகைத்தல் மற்றும் போதைப் பொருட்களை பாவித்தல் அவற்றை விற்பனை செய்தல், விநியோகித்தல், கொண்டு செல்லுதல் பாதுகாத்தல்,சேமித்து வைத்தல் ஆகிய அனைத்தும் நேற்றுமுதல் முதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது:
கல்முனைப் பிரதேசத்தில் வாழும் ஒரு நபர் மேற்படி குற்றங்களில் ஈடுபடும்போது புகைத்தல் போதைப் பொருள் ஒழிப்பு செயலணியினால் அமைக்கப்படும் விசாரணை சபையின் முறையான விசாரணை ஒன்றின் முடிவில் நிருபிக்கப்படின் இஸ்லாமிய ஷரீஆவுக்கு அமைய குறித்த நபருக்கு சீர்திருத்தக் (தஃஸீர்) தண்டனைகள் நிறைவேற்றப்படும் .

குறித்த குற்றச்செயல் தொடர்பான சாட்சியங்களை மறைத்தல், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தல், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு உதவுதல், ஊர் கட்டுப்பாட்டை மீறுதல் ஆகிய அனைத்தும் தடுக்கப்படுகின்றன. இவற்றில் ஈடுபடும் எவராக இருப்பினும் அவர்களுக்கும் தண்டனைகள் நிறைவேற்றப்படும்.

மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பொலிஸ் திணைக்களம் நீதிமன்றம் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற விசாரணை சபைகள் எடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் இச்செயலணி பூரண ஒத்துழைப்பை வழங்கும்.

அதேவேளை, மேற்படி கட்டுப்பாடுகளை மீறி புகைத்தல் போதைப்பொருள் விடயத்தில் தொடர்ந்தும் ஈடுபடுவர்கள் அல்லது இது விடயமாக நீதிமன்றத்தினால் தண்டணை வழங்கப்பட்டவர் புகைத்தல், போதைப்பொருள் செயலணியின் விசாரணை சபையிடம் குற்றத்தை ஒப்புக் கொண்டடு தௌபா செய்ய மறுத்தால் கீழ் குறிப்பிடப்படும் தண்டனைகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய நிர்பந்தம் உருவாகும்.
அவர்களின் பெயர்களை பள்ளிவாசல்களின் விளம்பரப் பலகையில் காட்சிப்படுத்தி, ஊர்க்கட்டுப்பாட்டை மீறியவர் என இனங்காட்டுதல், குறித்த நபரின் திருமணம், மரணம் முதலான நன்மை தீமைகளில் பள்ளிவாசலின் பங்களிப்புகளை விலக்கிக் கொள்ளுதல், குறித்த நபர் ஊரிலிருந்து முற்று முழுதாக தனிமைப்படுத்தப்படுவார், குறித்த நபரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு மையவாடியில் தனியான இடம் ஒதுக்கப்படும்.

இப்பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றிருந்த அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.


1 comments :

Anonymous ,  April 8, 2019 at 7:04 AM  

Hi there I am so glad I found your blog page, I really found you by error,
while I was researching on Digg for something else, Regardless I am here now and would just like to say thanks a lot for a remarkable
post and a all round entertaining blog (I also love the theme/design), I don't have
time to look over it all at the minute but I have saved it and also added in your RSS feeds, so when I
have time I will be back to read more, Please do keep up the fantastic
work.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com