Sunday, April 21, 2019

மட்டக்களப்பு குண்டுதாரியின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு.

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் குண்டுதாரி என சந்தேகிக்கப்படுபவரின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த தேவாலயத்தில் குண்டு வெடிப்பிலிருந்து உயிர்தப்பியுள்ள பெண்ணொருவர் வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கூறுகையில், அங்கே பொதி ஒன்றுடன் சென்று உட்கார்ந்திருந்த நபர் எனக்காகவும் மன்றாடுங்கள் என்று கேட்டதாகவும் சிறிது நேரத்தில் பாரிய சத்தத்துடன் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிகழ்வு மட்டக்களப்பில் பாரிய கொதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், முஸ்லிம் மக்கள் வாழுகின்ற பிரதேசங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளபோதும் பெரும் எண்ணிக்கையான படையினர் முஸ்லிம் பிரதேசங்களுக்கான பாதுகாப்பிற்கென வீதிக்கு இறக்கப்பட்டுள்ளனர்.

சிசிரிவி கமராக்களை பரிசோதித்ததில் அதிகமான குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடங்களுக்கு நபர்கள் பார்சல்களை கொண்டு சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com