Sunday, April 21, 2019

தெமட்டக்கொட குண்டுவெடிப்பில் 3 பொலிஸார் பலி! பரஸ்பரம் துப்பாக்கி பிரயோகம்..

தெமட்டகொட பிரதேசத்திலுள்ள தொடர்மாடி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸாரை கண்ட பயங்கரவாதிகள் குண்டை வெடிக்க செய்து கொண்டுள்ளனர். இவ்வெடிப்பில் மூன்று பொலிஸார் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் அங்கு பொலிஸாருக்கும் குறித்த நபர்களுக்குமிடையே சிறிய துப்பாக்கி சண்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.

அவ்விடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் இருவரை கைது செய்துள்ளனர்.

தொடர்மாடியை பற்றியிருந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களுக்கான வெடிமருந்து மற்றும் குண்டுகளை எடுத்துச் சென்றது என சந்தேகிக்கப்படும் வேன் வண்டி ஒன்றை வெள்ளவத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும் அதன் சாரதி தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக அறியக்கிடைக்கின்றது.

மேலும் பாணந்துறைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தே மேற்படி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அறியமுடிவதுடன் குறித்தவீடு தற்போது சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் தெஹிவளை குண்டுவெடிப்புடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பெயரில் தெஹிவளை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை செய்து செய்து செல்லும்போது ஆவேஷமடைந்த பொதுமக்கள் அவரை தாக்கமுற்பட்டபோதும், பொலிஸார் மிகவும் கடினமாக அவரை பாதுகாத்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com