Sunday, April 21, 2019

இரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள். சந்தேக நபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று காலை தொடக்கம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள 8 குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது இரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என தெரியவருகின்றது.

சங்கரிலா ஹோட்டல் மற்றும் கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என தெரியவருகின்றது. சங்கரிலா ஹோட்டல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் சஃரான் ஹசிம் என்ற பயங்கரவாதி ஒருவன் உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதே நேரம் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தெமட்டகொடை தொடர்மாடி ஒன்றிலுள்ள வீடு ஒன்றும் மற்றும் தெஹிவளை பிரதேசத்திலுள்ள தங்குமிட விடுதி ஒன்றும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com