Monday, March 4, 2019

பிரதமரை விசாரணை செய்யுங்கள், ஆதாரம் தருகின்றோம் - ஜனநாயக இடதுசாரி முன்னணி

கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமரை விசாரிக்கவேண்டும் என்று முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டை ஜனநாயக இடதுசாரி முன்னணியின் உறுப்பினர் ஒருவர் முன்வைத்துள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் முறிகள் மோசடியுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தொடர்பிருப்பதாக பலராலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், இந்த பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பிரதமரிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு குறித்த முறைப்பாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதமரிடம் விசாரணைகளை மேற்கொள்ளத் தேவையான எல்லாத்
தரவுகளையும் கையளிப்பதற்கு தாம் ஆயத்தமாகவுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் மேலும் குறிபிட்டார்.

பிரதமருக்கு எதிரான விசாரணையை கோரி ஜனநாயக இடதுசாரி முன்னணியின் உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த முறைப்பாடு, ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன உள்ளிட்ட குழுவினருக்கு எதிரிவரும் வாரமளவில் கையளிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இதன்பின்னரே பிரதமரிடம் விசாரணையை முன்னெடுப்பதா? என்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்படும் எனவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com