Monday, March 4, 2019

உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை எதிர்காலத்தில் நன்மை அளிக்கும் - ரேணுகா ஜயமான்ன

பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை எதிர்காலத்தில் நன்மை அளிக்கும் என்று, பங்களாதேஷ் வர்த்தகப் பேரவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ரேணுகா ஜயமான்ன தெரிவித்துள்ளார். இலங்கை, பங்களாதேஷ் வர்த்தகப் பேரவையின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இரண்டு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் சுமார் 45 வருட காலமாக காணப்படுகின்றது. இந்த நிலையில் இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை, எதிர்காலத்தில் பொருளாதார ஒத்துழைப்பு வலுப்பெற வழிவகுக்குமென அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com