Saturday, March 2, 2019

பாடசாலை கல்வியை முடித்தவர்களுக்கு, விசேட ஆங்கில மொழி பேச்சு பயிற்சி - தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்

பாடசாலை கல்வியை நிறைவு செய்த 18 தொடக்கம் 35 வயதிற்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்காக, விசேட ஆங்கில மொழி பேச்சு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி, ஆறு மாத காலத்திற்கு வழங்கப்படும். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் இந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்த விசேட பயிற்சிகள், எதிர்வரும் பத்தாம் திகதி தொடக்கம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 2.30 தொடக்கம் 5.30 வரை, மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த பயிற்சிகளில் வெளிமாவட்டத்தில் உள்ள, பாடசாலை கல்வியை முடித்தவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்த பயிற்சிகளில், மாணவர்கள் பங்கு பற்றி, பயன் பெற வேண்டும் என, ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com