Saturday, March 2, 2019

அபிநந்தன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானினால் விடுதலை செய்யப்பட்ட இந்திய விமானியான அபிநந்தன், தற்போது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வான் எல்லைக்குள் தனது நாட்டு விமானம் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்த வேளையில், அபிநந்தன் அந்நாட்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து அவரை விடுவிக்க வேண்டும் என, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. இதன்போது பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான், இந்திய விமானி அபிநந்தனை விடுவிப்பதாக அறிவித்தார்.

நல்லெண்ண அடிப்படையில் விமானி அபிநந்தனை விடுப்பதாக இம்ரான் கான் குறிப்பிட்டார். இவரது அறிவிப்பை அடுத்து உலக நாடுகள், பாகிஸ்தானுக்கு பெரும் வரவேற்பை தெரிவித்த நிலையில், அபிநந்தன் நேற்றைய தினம் பாதுகாப்பாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது விமானி அபிநந்தன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com