Tuesday, March 19, 2019

புலிகளின் வன்செயல்களை எதிர்த்து ஜெனிவாவில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 40 வது அமர்வுகள் இடம்பெற்று வரும் இந்நிலையில், நேற்று முன்தினம் ( ஞாயிற்றுக்கிழமை 17) ஐ.நா முன்றலில் புலிகளுக்கு எதிரான கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புலம்பெயர்ந்து வாழும் பெருந்திரளான இலங்கையர்கள் கலந்து கொண்ட இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கலந்து கொண்டு எல்ரீரீஈ யினர் மேற்கொண்ட அத்துமீறல்கள் தொடர்பில் விளக்கினார்.

உலக இலங்கையர் பேரவையினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றவாளிகள் அல்லவென்றும் புலிகளே போர்க்குற்றவாளிகள் என்றும் வானுயரக் கத்தினர்.
















0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com