Tuesday, March 19, 2019

வசந்த கரன்னாகொடவிடம் நான்கு மணி நேர விசாரணை - குற்றப்புலனாய்வு திணைக்களம்

11 தமிழ் இளைஞர்களின் கடத்தல் விவகாரம் தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்த விசாரணைகளின் ஒரு கட்டமாக இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவிடம், அண்மைய நாட்களில் பலமணிநேர விசாரணைகள் இடம்பெற்று வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, இன்றைய தினம், மூன்றாவது தடவையாக அழைக்கப்பட்ட வசந்த கரன்னாகொடவிடம், முற்பகல் 9.30 முதல் தொடர்ந்து நான்கு மணிநேரம் விசாரணைகள் இடம்பெற்றதாக, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற தமிழ் இளைஞர்களின் கடத்தல் விவகாரம் குறித்து, அப்போதைய கடற்படை தளபதி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com