Friday, March 8, 2019

நாலக்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு - நீதிமன்றம்

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருமான நாலக்க டி சில்வா முன்வைத்த பிணை கோரிய மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுக்காப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து இவரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் குறித்த கொலை சதித்திட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில், இதன்போது, நாலக்க டி சில்வா முன்வத்த பிணை கோரிய மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி நிராகரித்து உத்தரவிட்டது. மேற்படி உத்தரவைத் திருத்தி பிணையில் விடுவிப்பதற்கு கோட்டை நீதவானுக்கு உத்தரவிடுமாறு கோரி நாலக்க டி சில்வா தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com