Tuesday, March 12, 2019

மரண தண்டனை நிறைவேற்றாளர் பதவிக்கான நேர்முகப் பரீட்சை இந்த மாதம் - நீதி அமைச்சு

அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக, அமெரிக்க பிரஜைஒருவர் உட்பட 102 விண்ணப்பங்கள் கிடைத்திருந்த நிலையில், பொருத்தமான 79 விண்ணப்பதாரிகளை நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, அவர் மேலும் கூறினார். ஆகவே நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சையில் இரண்டு பேரை தெரிவு செய்ய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர்ப் பட்டியல் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com