Tuesday, March 12, 2019

வரவு செலவுத்திட்டத்தை மட்டும் தோற்கடிக்காது, நம்பிக்கை இல்லா பிரேரணையையும் கொண்டு வரவேண்டும் - மேர்வின் சில்வா

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றையே ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவர வேண்டும் என, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்அவர் இதனைக் கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியாலேயே ஜனாதிபதி ஆசனத்தை பெற்றவர். ஆனால் அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுகின்றார். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதிக்கு தகுந்த பாடத்தைத் புகட்ட வேண்டும்.

ஜனாதிபதிக்கு ஒரு நல்ல பாடத்தை புகட்ட வேண்டும் என்றால் வெறுமனனே வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணையை மாத்திரம் தோற்கடிப்பதால் முடியாது. நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றையே கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com