Thursday, March 14, 2019

ஐ நா அமர்வில் பங்கேற்போர் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வில் இலங்கை சார்பில் இரண்டு குழுக்கள் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை முன்வைப்பதிலும் பார்க்க, திலக் மாரப்பன தலைமையிலான குழு பிரதிநிதித்துவம் செய்வதே, சரியாக அமையும் என்று ஜனாதிபதி நம்புவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். . ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கைத் தரப்பில் குழு ஒன்றை பிரதிநிதித்துவம் செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதித் தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.

இந்த ஜெனிவா பயணத்தில் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம மற்றும் வடமாகாண ஆளுநர்ஆகியோர் ஜெனீவா செல்வரென்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பான சந்திப்பு ஜானதிபதியுடன் நடைபெற்ற நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் கூறினார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன இந்தக் குழுவின் தலைவராக செயற்படும் நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி ஜெனீவாவில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்துக்கள் அடங்கிய கூட்டறிக்கையை இலங்கை சார்பில் முன்வைப்பாரென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com