Friday, March 15, 2019

இலங்கை ஏன் கால அவகாசம் கோருகிறது ? - ஹர்ஷ டி சில்வா விளக்கம்

இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இதுவரை முன்னெடுத்த விடயங்களைச் சுட்டிக்காட்டியே மேலும் கால அவகாசம் கோருகிறது என்றும், இந்த விடயம் தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தத் தேவையில்லை எனவும், பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோகங்கள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் மீதானஇரண்டாம் நாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்படி கூறினார். ஆகவே, அரசாங்கம் செயற்படுத்தும் வேலைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு கால அவகாசத்தின் தேவை உள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், தற்போது நிலைமை மாற்றமடைந்துவிட்டது. மின்சாரக் கதிரை தொடர்பில் பணம் கொடுத்து பேச சொன்னால் கூட எவரும் பேசாத தயாராக இல்லை. அந்தளவிற்கு நாட்டின் நிலைமை மாற்றமடைந்துள்ளது. இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சலுகைகளும் இலங்கை பிரஜை என்ற அந்தஸ்தும் கிடைக்கும் முறையான சூழலை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். அதனை அடிப்படையாகக் கொண்டே தற்போதைய அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com