இலங்கையில் திடீர் வைரஸ் தொற்று - சுகாதார துறை
அண்மைக்காலமாக நாடு முழுவதும் மர்மமான வைரஸ் காய்ச்சலொன்று பரவி வருவதாக, சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று காரணமாக உடலிலுள்ள வெண்குருதி சிறு துணிக்கைகள் மற்றும் குருதி சிறுதட்டுக்களின் அளவு குறைவடையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்த வைரஸ் தொற்று இளம் வயதினரை தாக்கியிருந்தாலும், தற்போது சிறுவர்களுக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இருமல், சளியுடன் காய்ச்சல் நீடித்தால், உடலின் வெண்குருதிக் கலன்களை பரிசோதித்து, உரிய மருத்துவ ஆலோசனைகளின் படி செயல்பட வேண்டும் என, சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்த வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு, அதிக ஓய்வெடுப்பதுடன் நீர் ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும் என, விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment