கதிர்காமம் விஷ்ணு ஆலயத்தில் ஒருவர் தீயிட்டு தற்கொலை
கதிர்காமம் விஷ்ணு ஆலயத்தில் தன்னைத்தானே தீயிட்டு கொண்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை திஸ்ஸமஹராம, ரண்மினிதென்ன பகுதியை சேர்ந்த 59 வயதுடைய பக்தர் ஒருவர் தன்னை தானே தீயிட்டு, கதிர்காமம் ஆலயத்தில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்குள் நுழைந்துள்ளார். இதனால் ஆலயத்தினுள்ளும் தீப்பரவல் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை கவனித்த மற்றைய பக்தர்கள் தீ பரவலை கட்டுப்படுத்தி, தீக்காயங்களுக்கு உள்ளான நபரை ஹம்பந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் பலியாகியுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளார்கள். எவ்வாறு இருப்பினும் குறித்த நபர் எதற்காக தன்னைத்தானே தீயிட்டு விஷ்ணு ஆலயத்தினுள் வந்து தற்கொலை செய்துள்ளார் என்ற விடயம் தொடர்பில், இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
0 comments :
Post a Comment