Friday, March 8, 2019

அடுத்த உயர்தர பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு, சிறந்த சலுகைகள் வழங்கப்படும்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மிகச் சிறப்பாக சித்தி பெறும் 14 பேருக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என, அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐந்து பிரதான துறைகளிலும், ஒன்பது மாகாணங்களிலும் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்கள் புலமைப்பரிசில்களைப் பெறுவார்கள். இதற்காக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 50 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்படும்.

இதன்மூலம் இலங்கையின் கல்வித் திறனை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com