Saturday, March 23, 2019

பிரபாகரனை இரண்டாக பிரித்ததுபோல் தேவையானால் உன்னையும் நாலாக பிரிக்கலாம். சிவாஜிலிங்கத்திற்கு பதில்.

ஐக்கிய நாடுகள் சபையின் பக்கவறை நிகழ்வுகளில் கலந்து கொண்ட சிவாஜிலிங்கம் அந்நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்த பெரும்பாண்மை இனத்தவர்களுடன் வாதங்களில் ஈடுபட்டார். அவ்வாதங்களின்போது உங்களது நோக்கம் இந்நாட்டினை இரண்டாக பிரிப்பதா என அங்கு கலந்து கொண்டிருந்தோர் கேட்டனர். அதற்கு பதிலளித்த சிவாஜிலிங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் நாட்டினை இரண்டாக அல்ல நான்காக பிரிப்போம் என்றார்.

சிவாஜிலிங்கத்தின் மேற்படி கருத்தானது சிங்கள இனவாதிகளுக்கு மீண்டும் தீனியாக அமைந்துள்ளது. அதன்பிரகாரம் „எமது இளைஞர்கள் பிரபாவை இரண்டாக பிளந்தார்கள், உனக்கு நாலு வேண்டும் என்றால் அதையும் செய்து தருகின்றோம்' என்ற வாசகத்துடன் பிரபாகரன் கொத்தி பிரிக்கப்பட்டுள்ள படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வலம்வருகின்றது.



சிவாஜிலிங்கம் சிங்கள இனவாதிகள் தொடர்ந்தும் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்கு ஏதுவான கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றார். இச்செயற்பாட்டுக்காக சிவாஜிலிங்கத்திற்கு இனவாதிகளால் பணம் வழங்கப்பட்டு வருவதாகவும் அறியக்கிடைக்கின்றது.

தமிழ் மக்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை என்றும் அவர்கள் இந்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்தினையே கொண்டுள்ளார்கள் என்றும் தமது மக்களை ஏமாற்றி வாக்குசேகரிக்கும் தரப்பினருக்கு வெளிப்படையாக சிவாஜிலிங்கம் சிறிதரன் விக்னேஸ்வரன் போன்றோன் தொடர்ந்தும் உதவி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com