Saturday, March 2, 2019

நோர்வூட் பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு

நோர்வூட் கெசல்கமுவ ஓயாவை அகலபடுத்துவதாக கூறி சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசல் ரீ நீர்தேக்கத்திற்க்கு நீர் ஏந்தி செல்லும் நோர்வூட் பகுதியில் உள்ள கெசல்கமுவ ஒயாவை அகலப்படுத்தும் போர்வையில், ஊழியர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.

அத்துடன் இந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதேச மக்கள் நேற்றைய தினம் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன், நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்

மழைக் காலங்களில், கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்து, நோர்வூட் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு, வெள்ள நீர் உள்நுழைவதால், கடந்த நான்கு மாதங்களாக கெசல்கமுவ ஓயாவினை அகலப்படுத்த, அம்பகமுவ பிரதேச செயலாளர் காரியாலத்தின் ஊடாக அனுமதி வழங்கபட்டு, கெசல்கமுவ ஓயாவை அகலப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே பிரதேச மக்கள் குறித்த குற்றசாட்டை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com