Wednesday, March 6, 2019

நாடாளுமன்றத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் ரஞ்ஜன் ராமநாயக்க

சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று, நாடாளுமன்ற உறுப்பினர்களை திடீர் மருத்துவப் பரிசோதனையொன்றுக்கு உட்படுத்தினால், பலருடைய உடம்பில் போதைப் பொருள் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கலாம் என பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க நேற்று தெரிவித்து மீண்டும் ஒரு அமளி துமளியை ஏற்படுத்தி இருந்தார்.

வரவு செலவுத் திட்ட நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். கொக்கைன் பயன்படுத்துபவர்களை இன்றும் நாடாளுமன்றத்தில் சந்தித்தீர்களா? என ஊடகவியலாளர் ஒருவர் ரஞ்ஜன் ராமநாயக்கவிடம் கேள்வி எழுப்பியதற்க்கே, அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டு இருந்தார். கொக்கைன் விவகாரத்தில் ரஞ்ஜன் ராமநாயக்க அண்மையில் வாக்கு மூலம் அளித்திருந்த போதிலும், அந்த அறிக்கை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com