Monday, March 11, 2019

ஜனநாயகத்தை பாதுகாக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரிதும் உதவியது - ஐக்கிய தேசிய கட்சி

இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரிதும் உதவியதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துலா மஹ்ரூப் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம், இன்றைய தினம், நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன் போது, விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அப்துலா மஹ்ரூப், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஜனநாயகத்திற்கான பங்களிப்பை நினைவூட்டினார்.

இந்த நாட்டில் ஜனநாயகம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஜனநாயகத்தை பாதுகாத்து உறுதிப்படுத்த பல அரசியல் கட்சிகள் போராடின.

குறிப்பாக சிறுபான்மை கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஜனநாயகத்தை வெற்றி கொள்ள கடுமையாக போராடின. இக்கட்சிகள் தமது மக்களுக்காக நீதிமன்றம் வரை சென்று ஜனநாயக்தை உறுதிப்படுத்தின.

இதற்காக நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மையின கட்சிகளுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அதேபோன்று சிறுபான்மையின மக்களின் ஆதரவின்றி எவராலும், இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என, ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துலா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com