Monday, March 11, 2019

இலங்கை 2020 இல், கண்ணிவெடி அற்ற நாடாக மிளிரும் - மகேஷ் சேனாநாயக்க

இலங்கை எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் கண்ணிவெடிகள் அற்ற நாடாக மாறும் என, இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சாமானத்தை நிலைநாட்டுவதற்கு தம்மை அர்ப்பணித்து பணியாற்றியவர்கள், இராணுவத்தினராவர். அவர்களின் தியாகத்தை ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாது. அவர்கள் தற்போது இலங்கையின் அபிவிருத்திக்காக மீண்டும் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர்

இராணுவத்தினரால் வழங்கப்படும் உன்னதமான சேவைகளில் கண்ணிவெடி அகற்றலும் ஒன்றாகும். இலங்கை இராணுவத்தினரின் முயற்சியால், இலங்கை எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட்ட நாடாக மிளிரும்.

தற்போது உருவாகிவரும் புதிய தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டு செல்கிறது. அதற்கு ஏற்றவகையில் நாமும் வளர வேண்டும். ஆனால் அதனை அழிவுப் பாதைக்கும் நாம் கொண்டு செல்வது தவறானதாகும்.

அத்துடன் இங்கையிலுள்ள இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளிவருகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு நாம் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என, இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவ தலைமையகத்தின் வழிகாட்டலில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப வள மையத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே, அவர் இதனை தெரிவித்தார்.

இந்த விழாவில், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன், அரச அதிகாரிகள், இராணுவத்தினர், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com