Monday, March 4, 2019

வர்த்தகர்கள் கொலை தொடர்பில் நேற்று கைதாகிய இருவருக்கும் விளக்கமறியல்

ரத்கம - உதாகம பிரதேசத்தில் இரண்டு வர்த்தகர்கள் காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட இருவரும், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி மஞ்சுள அசேல மற்றும் ரஷீன் ஷிந்தக எனப்படும் இரண்டு வர்த்தகர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டு, பின்னர் எரிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் இன்று காலி நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் வன இலாகா அதிகாரி ஆகியோர் நேற்று கைதாகினர்.
இவர்களில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சென்றிருந்தபோதே, தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் கைதாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com