Monday, March 4, 2019

மன்னார் கிறிஸ்தவர்களின் அராஜகத்திற்கு நீதிமன்று தற்காலிக தீர்வு. அடைக்கலநாதனின் பின்னணி அம்பலமாகுமா?

கிறிஸ்தவ பாதிரி ஒருவர் தலைமையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியில் அமைக்கப்பட்ட வீதி வளைவு உள்ளுர் காடையர் காடைச்சிகளால் உடைத்து வீழ்த்தப்பட்டு, அகற்றப்பட்டது.
இலங்கையில் ஏற்பட்ட இனமுரண்பாட்டின் விளைவுகள் தந்த வேதனையிலிந்து நாடு மீள முடியாது தவிக்கையிலையே புதியதோர் மத வன்முறைக்கு இச்செயற்பாடு வித்திடப்பட்டுள்ளது.

இந்துக்களின் பிரதான விரதங்களில் ஒன்றான சிவராத்திரி விரதத்திற்காக நாட்டின் சகல பாகங்களிலுருந்தும் இந்துக்கள் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு செல்வது வழமை. அவ்வாறு நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகின்ற மக்களுக்கு வழிகாட்டியாக மன்னார் மாந்தை சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரம் சிவன் ஆலயத்துக்குச் செல்லும் கோயில் வீதியில் அமைக்கப்பட்டிருந்த வளைவே உடைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினர் பொலிஸாருடாக விடயத்தினை நீதிமன்றுக்கு கொண்டு சென்றுள்ளனர். விடுமுறைதினமான இன்று விடயம் நீதிபதியின் வாசஸ்தலத்தில் விசாரணை செய்யப்பட்டு, குறித்த வளைவை உடனடியாக திருத்தி அமைக்குமாறும் அதனை எதிர்வரும் நான்கு நாட்களுக்கு அவ்விடத்தில் வைப்பதற்கு அனுமதியளிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உடைப்பு விடயத்திற்கு ஸ்தலத்தில் தலைமை தாங்கிய கிறிஸ்தவ தந்தையான மார்கசு என்பவர் செல்வம் அடைக்கலநாதனின் தீவிர ஆதரவாளர் என்றும் தேர்தல் காலங்களில் அடைக்கலநாதனுக்கு வாக்கு சேகரிக்கும் பேர்வழி என்றும் அறியமுடிகின்றது.

ஆனால் தமிழ் தேசியம், தமிழர் ஒற்றுமை என முழக்கமிடும் செல்வம் இதுவரை மேற்குறித்த பாதிரியின் இழிசெயல் தொடர்பில் கப் என்று இருக்கின்றமை யாவரையும் விசனம் கொள்ள வைத்துள்ளது. இவர்கள் தமது இருப்புக்காக இந்நாட்டில் இன மத மோதல்களை உருவாக்கி குளிர் காய்கின்றனர் என்பது இவ்விடயத்தில் அம்பலமாகின்றது.

இச்சம்பவம் குறித்து சிவசேனை இந்துக்கள் அமைதி காக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. இது தொடர்பில் சிவசேனை விடுத்துள்ள செய்தியில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சைவப் பெருமக்களே, சைவ இளைஞர்களே, சைவத் தாய்மார்களே!

திருக்கேதீச்சரத்தில் கோயிலார் அமைத்த வரவேற்பு வளைவு துருப்பிடித்தது. எழுத்துகள் மங்கின. மகாசிவராத்திரி நாள். இரண்டு இலட்சம் சைவர்கள் இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து வருவார்கள்.

வளைவைத் திருத்துவோம். மங்கிய எழுத்துகளைப் புதுப்பிப்போம். பொலிவு கண்டு ஆர்ப்போம். அடியார்களுக்கு அருள் பெருக்கும் சூழலை உருவாக்குவோம் எனக் கோயிலார் முயன்றனர். ஆவன செய்தனர்.

சட்டங்களுக்கு மதிப்பளித்தனர். நெடுஞ்சாலை வளர்ச்சித் துறை, வட்ட ஆட்சியர் விதிகள், பிரதேச சபை விதிகள் எவற்றையும் மீறாமல் தமக்குள்ள எல்லைக்குள் தொண்டாகச் செய்தனர்.

வங்காலையில் இருந்து வந்தவனைப் பங்குத் தந்தை என்கின்றனர். புனை துகில் கிறித்தவரான புற உடையில் கிறித்தவரான மார்க்கசு என்ற பெயர் அவனுக்கு. அவனது தொலைப்பேசி +94772881878. எத்தன், ஈனன் எனத் திருஞானசம்பந்தர் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இவனைப் போன்றவர்களை அழைத்தார்.

கிறித்தவரான மார்க்கசு கிறித்தவக் குண்டர்களையும் கோடர்களையும் அழைத்துவந்தார். சட்டத்தைக் கையில் எடுத்தார். அரச சட்டங்களை மீறினார். தன்னுடன் வந்தோரை ஏவினார். கோயிலாரை நோக்கி மிரட்டினார். சைவத் தொண்டரை விரட்டினார். படப் பதிவுகள் உள்ளன. காணொலிப் பதிவுகள் உள்ளன.

கோடன் மார்க்கசு தலைமையில் வந்த குண்டரும் கொடியரும் நெடுங்காலம் அங்கிருந்த சைவ வளைவைத் தகர்த்தனர். தரைமட்டமாக்கினர். எம்பெருமானின் வாகனம் நந்தி. அதுவே சைவரின் கொடி. நந்தியெம்பெருமானைக் காலால் மிதித்தனர். காறித் துப்பினர். காழ்ப்பில் திளைத்தனர்.

சைவ உலகமே கலங்காதே. திருப்பித் தாக்காதே. தேவாலயங்கள் மீது கல் வீசாதே. சிலுவைகளைப் புடுங்காதே. கிறித்தவ வளைவுகளை உடைக்காதே. சட்டத்துக்கு மதிப்புக் கொடு.

பாலாவியின் கரைமேல் அடாத்தாகக் கட்டிய உலூர்தம்மாள் தேவாலயத்தைப் பாரிய பெக்கோ எந்திரம் கொண்டு தரைமட்டமாக்கவேண்டும் என நினைக்கிறாய். அது மிக மிகத் தவறு. சட்டத்தை மதித்து நட.

ஆட்சியில் உள்ளவர்கள் சட்டத்தைப் பேணுவார்கள் என நம்பு. அவர்களிடம் முறையிடு.

திருக்கேதீச்சரப் பெருமானின் திருவிளையாடல் ஈதாம். அவரிடம் முறையிடு.

மன்னார் சிவ பூமி. 2000 சதுர கிமீ பரப்பளவு. ஓரிலட்சம் மக்கள். அவர்களுள் சிறுபான்மையாய்ச் சைவ உலகம். ஏனையோர் வந்தேறிய வாழ்வியலினர்.

வந்தேறிகள் உள்ளூரவரை உதைக்கின்றனர். நீ திருப்பி உதைக்காதே. உன் மரபு அதுவல்ல. நாகரீகமாக நடப்பதே சைவ மரபு. சிவ சேனையின் மரபு.

மன்னார் சிவ பூமியாகும் நாள் மலரும். திருப்பித் தாக்காமல், கிறித்தவத் தேவாலயங்களை உடைக்காமல், கிறித்தவ வளைவுகளைச் சேதமாக்காமல், கிறித்தவ சொருபங்களை அகற்றாமல், அறங்காக்கும் கிறித்தவரை மதித்து, கோடன் எத்தன் ஈனன் மார்க்கசு போன்றோரையும் அவனின் தவறான வழிநடத்தலில் வந்த குண்டர்களையும் கொடியோரையும் புறந்தள்ளி, சைவ மரபு பேணுவாயாக. திருக்கேதீச்சரப் பெருமானின் பேரருள் நின்னதாகும்.

அதேநேரம் மன்னார் சம்பவத்திற்கு வெட்கி தலை குனிவதாக யாழ்.மறை மாவட்டம் அறிவித்துள்ளது. அதுவும் மத குருவொருவர் தலைமையில் நடந்த இச்சம்பவத்தினால் மனம் வருந்தியுள்ள இந்து உறவுகளிடம் மன்னிப்பு கோருவதாக யாழ் மறைமாவட்டத்திற்கான குரு முதல்வர் ப. யோ. ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com