Tuesday, March 12, 2019

எரிபொருள் விலையில் மாற்றம் இடம்பெறவில்லை

நிதி அமைச்சு நேற்று வெளியிடும் என்று எதிரிபார்க்கப்பட்ட எரிபொருள் விலைச்சூத்திரம் வெளியாகவில்லை. நிதி அமைச்சிடம் இருந்து எரிபொருள் தொடர்பில் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானிக்கும் விலைச் சூத்திரக்குழு நேற்றுக் கூடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவுமுதல் எரிபொருள் விலையில் மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலைச் சூத்திரக் குழு கூடி, எரிபொருள் தொடர்பில் புதிய விலை குறித்து தீர்மானத்தை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் கடந்த 10 ம் திகதி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைச்சூத்திரம் அமுலாகும்வகையில் அறிவிக்கபடும் என்று எதிரிபார்க்கப்பட்டது.

இந்நிலையிலேயே இந்த விலை மறுசீரமைப்பு நேற்று இடம்பெறவில்லையென நிதி அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.

கடந்த மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 66 டொலர்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com