Tuesday, March 12, 2019

1800 மில்லியன் ரூபா பெறுமதியுடைய ஹெரோயின் மீட்பு

150 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் மொறட்டுவை – ராவத்தாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 1800 மில்லியன் ரூபாஎன பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

அண்மையில் 500 கோடி பெறுமதியான வைரத்தைத் திருடியதாகக் கூறப்படும் கெலும் இந்திக்க என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்தே இந்த ஹெரோயின் தொடர்பில் தகவல் கிடைத்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த சந்தேகநபர் ஹெரோயின் மீட்கப்பட்ட அதே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் டுபாயில் கைது செய்யப்பபட்டுள்ள பாதாள உலகக்குழுவின் தலைவர்களில் ஒருவரான மாகந்துரே மதூஷ், குறித்த வீட்டை தமது பாதுகாப்பிற்காக பயன்படுத்தி வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, களுத்துறையில் 24 கிலோகிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த
கஞ்சா போதை பொருளுடன் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்கேதநபர்கள், களுத்துறை தெற்கு மற்றும் தர்கா நகரை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com