Friday, March 1, 2019

எதிர்க்கட்சி தலைவருக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

எதிர்க்கட்சி தலைவர்  மஹிந்த ராஜபக்சவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று விஜயராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இரண்டு நாட்டு இராஜதந்திர உறவுகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com