Friday, March 1, 2019

யாழ் மீனவர்கள் இந்தியாவில் வைத்து கைது

அத்துமீறி இந்திய கடற்பரப்புக்குள் நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கரையோர காவல் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – தொண்டைமனாறு பெரியகடற்கரை பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மோகனராசா மற்றும் ராசலிங்கம் ராசசிறி ஆகியோரே தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் சிறியரக படகொன்றும் இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com