Friday, March 22, 2019

ஜேவிபி – ஐதேக சந்திப்பு! ஐ.தே.கட்சி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஆதரவாம்.

மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்குமிடையே இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. ஜேவிபி யினரால் முன்மொழியப்பட்டுள்ள 20 வது அரசியல் யாப்பு திருத்தத்தினூடாக நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவினை நாடியே குறித்த சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன்போது ஐதேக நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பதற்கு கொள்கை ரீதியில் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தமது ஐக்கிய தேசிய முன்னணி என்ற அக்கட்சியின் கூட்டணியுடன் இது தொடர்பில் பேசவேண்டும் என்று தெரிவித்துள்ளது. குறித்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை யாவரும் அறிந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com